ஊழல் விவகாரங்களில் தொடரப்பட்டு வரும் விசாரணைகளில், தமிழகத்திலிருந்து அடுத்து விசாரணைக்கு அழைக்கப்படும் பிரமுகராக, தயாநிதிமாறன் இருக்கலாம் என சிபிஐ வட்டாரத் தகவல்கள் கசிந்திருப்பதாகத்
தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்பெக்டரம் 2ஜி அலைக்கற்றை ஊழல்விவகாரத்தை துருவி ஆராய்ந்து வரும் சிபிஐ, கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை உள்ள 6 ஆண்டுகளில் தொலைதொடர்புத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்தும், பூர்வாங்க விசாரணைகளைத் நடத்தி வருகிறது.