சோனியாவும், பிரதமரும், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதன் மூலம், தி.மு.க.,வில் இருந்து விலகி, காங்கிரஸ் அடுத்த நகர்வுக்கு ஆயத்தமாவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன், “நீங்கள் விரும்பிய கூட்டணி அமையும்’ என, ஜெயலலிதா கூறிய நாள் முதல், காங்கிரஸ் மீது, தி.மு.க.,வுக்கு இருந்த அதிருப்தி அதிகமாகியது.