முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக மாதிரி திட்டம் வகுக்கப்படும் என்று, மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்சித் கூறியுள்ளார்.
மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்சித் ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆந்திர அரசு பாணியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டுக்காக மாதிரி திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் எனது அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.