தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.8.12

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தளபதி பயணிக்க இருந்த விமானம் மீது ஏவுகணைத் தாக்குதல்


ஆப்கானிஸ்தானில் உள்ள கிளர்ச்சிக் குழுவினர்,  காபூல் நகரின் வடக்கே உள்ள நேட்டோ கூட்டுப் படையினர் பயன்படுத்தும் 'பக்ரம்' விமானத்தளத்தி ல்நிறுத்தி வைக்கப் பட்டிருந்த C-17 ரக பயணிகள் விமானத்தின் மீது இரு ஏவுகணைகளை ஏவி இன்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர். இத் தாக்குதல் மூத்த அமெரிக்க படைத்தளபதியான 'மார் ட்டின் டெம்ப்சேய்' இலக்கு வைத்து

பிரணாப் முகர்ஜி மீது வழக்கு: விடாது மல்லுக் கட்டும் சங்மா!

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டு வெற்றி பெ ற்றார். இவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தவறா ன தகவல்கள் தெரிவித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, பிரணாப் முகர்ஜியின் வெற்றி யை எதிர்த்து, கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதா க இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த பி.ஏ. சங்மா அறிவித்தார் இந்நிலையில் பிரணாப் மு கர்ஜியின் வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இ ன்று சங்மா வழக்கு தொடர்ந்தார்.

சிரிய போராளிகளுக்கு மேலை நாடுகள் மர்மமாக உதவுகின்றன.


சிரிய அதிபர் ஆஸாட்டின் படைகளுக்கு எதிராக ஆ யுதம் தூக்கியுள்ள போராளிகளுக்கு மேலை நாடுக ள் உளவுத் தகவல்களை பரிமாறி வருவதாக ஜேர்ம னியில் இருந்து வெளிவரும் பிளிட்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.ஆஸாட்டின் படைகள் நகர்வதை ஜேர்மனிய உளவுப்பிரிவினர் உளவறிந்து துருக்கியில் உள்ள நேட்டோ கட்டளையகத்திற்கு வழங்குகிறார்கள், அங்கிருந்து அமெரிக்க உளவுப்பி ரிவுக்கு தகவல் அனுப்பப்பட்டு, அவர்கள் வழியாக போராளிகளுக்கு போவதாக தெரிவிக்கப்படுகிறது.

துபாய்:காணாமல் போன குழந்தை "டிவிட்டர்' உதவியால் மீட்பு


காணாமல் போன குழந்தையை, "டிவிட்டர்' உதவியுடன், சில மணி நேரங்களில், போலீசார் கண்டு பிடித்துள்ளனர். துபாயை சேர்ந்த தம்பதியர், ரம்ஜான் பண்டிகையையொட்டி பொருட்களை வாங்குவதற்காக வணிக வளாகத்துக்கு கடந்த, 18ம்தேதி சென்றனர். கடைக்கு வெளியே, காரை நிறுத்தி விட்டு, குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததால் காரிலேயே விட்டு விட்டு, பொருட்களை வாங்கச் சென்றனர்.