பீஜிங், மே.26- பாகிஸ்தானில் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு சீனா உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ மந்திரி அகமது முக்தார் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்க சீனா மறுத்து விட்டது.
பாகிஸ்தான் கடற்படை தளத்துக்குள் தலீபான்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக தான் இவ்வாறு மறுப்பு கூறப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
பாகிஸ்தானில் கராச்சி நகரில் ஒரு கடற்படை தளம் உள்ளது. இதுதவிர கவ்தார் என்ற துறைமுகத்தில் இன்னொரு கடற்படை தளம் அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் சீனாவை வலியுறுத்தி வருகிறது. 2007-ம் ஆண்டு கவ்தார் என்ற இடத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சீனாவின் உதவியுடன் துறைமுகம் கட்டப்பட்டது. அது முதல் அந்த நகரில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் சீனாவை வற்புறுத்தி வருகிறது.
இதுகுறித்து சீன வெளிநாட்டு அமைச்சரக அதிகாரி ஜியாங் நிருபர்களிடம் கூறுகையில், பாகிஸ்தானில் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு சீனாவிடம் திட்டம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக