தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.5.11

முதல்வரா இருந்தவர் உறுப்பினர் ஆகிறார்? இதுதான் காலச்சக்கரமோ!?


சென்னை, மே 30: முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, திங்கள்கிழமை சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி ஏற்கிறார். திருவாரூர் தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்ற மே 23-ம் தேதி கருணாநிதி தில்லியில் இருந்தார். அவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் அன்று பதவி ஏற்கவில்லை. இவர்கள் தவிர அதிமுக தரப்பில் சிவபதி, மனோகரன் ஆகியோர் பதவி ஏற்காமல் இருந்தனர். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தாற்காலிக பேரவைத் தலைவர் செ.கு. தமிழரசன் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாகப் பதவி ஏற்றனர். கருணாநிதி, துரைமுருகன் ஆகியோர் திங்கள்கிழமை, சட்டப் பேரவைத் தலைவர் ஜெயக்குமார் அறையில் பதவி ஏற்க உள்ளனர்.

எல்லாரும் உறுப்பினரா இருந்து முதல்வர் ஆவார்கள், இவர் முதல்வரா இருந்து உறுப்பினராகிறார்

0 கருத்துகள்: