தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.1.11

பெண் நீதிபதியை பதவிநீக்கம் செய்தது சரியே: உச்சநீதிமன்றம்

புதுதில்லி, ஜன.16: ரயிலில் டிக்கெட் இல்லாமல் 3 முறை பயணம் செய்த பெண் நீதிபதியை பதவிநீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புறநகர் ரயிலில் 3 முறை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததற்காகவும், டிக்கெட் வாங்குமாறு வலியுறுத்திய ரயில்வே ஊழியரை அச்சுறுத்தியதற்காகவும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டான வாலவல்கர் 2000-ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் அதற்கு மேற்பட்டவர்கள் யாரும் இல்லை என்றும்;  நீதித்துறையில் உள்ளவர்கள் ஒவ்வொரு நடத்தையிலும் கண்ணியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து, அவரை டிஸ்மிஸ் செய்ததை உறுதிப்படுத்தி உத்தரவிட்டது.

0 கருத்துகள்: