தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.11.11

2 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு

அபுஜா, நவ. 8-  நைஜீரியா நாட்டில் ஹர்கோட் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இருந்த ஒரு எண்ணெய் கப்பலில் கடற்கொள்ளைக்காரர்கள் ஏறி அதை கடத்தி சென்றனர். கிரேக்க நாட்டுக்கு சொந்தமான இந்த கப்பலில் 2 இந்திய மாலுமிகள் இருந்தனர். அவர்களும் கப்பலுடன் கடத்தப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் இந்த கப்பல் கடத்தப்பட்டது. இதில் மாலுமிகளுடன் மொத்தம் 20
சிப்பந்திகள் இருந்தனர்.இந்த கப்பலை கொள்ளைக்காரர்கள் விடுவித்தனர். இந்த தகவலை சர்வதேச கடல் சார் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

0 கருத்துகள்: