தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.5.11

ஒசாமாவுக்காக கொல்கத்தாவில் சிறப்பு தொழுகை : பெருந்திரளானோர் பங்கேற்பு (படங்கள்)


அல்-கய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் ஆத்மா அமைதி அடைவதற்காக கொல்கத்தாவில் உள்ள திப்புய் சுல்தான் மசூதியில் இன்று சிறப்பு தொழுகை இடம்பெற்றது. பின்லேடன் கொல்லப்பட்ட பின் நடைபெறும் முதலாவது வெள்ளிக்கிழமை தொழுகை என்ற வகையில் இந்நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இமாம் மவுலானா நுரூர் ரெஹ்மான் பர்கதி தலைமையில் நடைபெற்ற இத்தொழுகை நிகழ்வில், அகில இந்திய சிறுபான்மை கூட்டமைப்பின் தலைவர் இத்ரிஸ் அலி கலந்துகொண்டார்.
'இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில், ஒசாமாவின் இறுதி சடங்கு உரிய முறையில் நடத்தப்படவில்லை. இஸ்லாமிய மதத்தை அமதிக்கும் வகையில், அவரது உடல் கடலில் வீசப்பட்டுள்ளது. அவரது ஆத்மா அமைதி அடைவதற்காக இந்த சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது என கூறினார். இத்தொழுகை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பின் லேடனின் மரணம் குறித்து தமது கண்டனங்களை கோஷங்களாக எழுப்பினர்.

ஒசாமாவுக்காக இத்தொழுகை நடைபெற்றதால், திப்பு சுல்தான் மசூதி அமைந்துள்ள தரம்தோலா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

0 கருத்துகள்: