
சென்னை : அமைச்சர் மரியம் பிச்சை மரணத்துக்கு காரணமான சரக்கு லாரியை, மேற்கு வங்க மாநிலத்தில் தமிழக சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டிய டிரைவர், ஆந்திராவில் பிடிபட்டார். திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் மரியம்பிச்சை. மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். அதிமுக மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். 13ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 16ம் தேதி அமைச்சராக பதவி ஏற்றார்.