தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.2.11

செவி சாய்ப்போம்

சமீபத்தில் நண்பர் ஒருவர் கூறிய குட்டிக்கதை. மனநல காப்பகத்திற்கு உணவு வழங்கும் பணி செய்யும் ஒரு ஓட்டுனர் வழக்கம்போல் உணவை வழங்கிவிட்டு வீடு திரும்ப எத்தனித்தார்.

அப்பொழுதுதான் ஒரு டயரின் நான்கு போல்ட்களும் பழுதடைந்திருப்பதை கண்டார். அருகிலோ வாகனத்தை பழுது பார்க்கும் கடைகள் எதுவும் கிடையாது. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு மனநிலை

மலேகான்:பிரக்யாசிங், புரோகித்திடம் சி.பி.ஐ விசாரணை

மலேகான்/மும்பை,பிப்.7:கடந்த 2006-ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பிரக்யாசிங் தாக்கூர், லெஃப்டினண்ட் கர்னல் புரோகித், பிரவீண் முத்தலிக் ஆகியோரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்த உள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பை திட்டமிட்டு நிகழ்த்தியவர்கள்தான் இவர்கள். 2006 மலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புதான் என அஸிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

இவர்களுடன் ராகேஷ் டாவ்தே, அஜய் ரஹிர்கர், ஸ்ரீநாராயணன் கல்சங்கரா, சியாம்ஸாஹு, முன்னாள் ராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாய, சமீர் குல்கர்னி, ஜகதீஷ் மாந்த்ரா, தயானந்த் பாண்டே, சுதாகர் சதுர்வேதி ஆகியோரையும் சி.பி.ஐ விசாரிக்க உள்ளது. இவர்கள் 2008 மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளாவர்.

சி.பி.ஐ இயக்குநர் கந்தசாமியின் தலைமையிலான சி.பி.ஐ குழு தற்பொழுது மலேகானில் முகாமிட்டுள்ளது. ஏ.டி.எஸ் சேகரித்த ஃபாரன்சிக் ஆதாரங்களை சி.பி.ஐ பரிசோதிக்கும். முதலில் இவ்வழக்கை விசாரித்த விசாரணைக் குழுவின் போலீஸ் அதிகாரிகளையும் சி.பி.ஐ விசாரிக்கும் என சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஹராஷ்ட்ரா ஒருங்கமைவு குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் படி 2008 ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஒன்பது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் ஜாமீன் மனுமீதான விசாரணை இன்று MCOCA நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

எகிப்திய அரசியலில் திருப்பம்: பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஒப்புதல்

கெய்ரோ,பிப்:எகிப்து நாட்டின் செல்வாக்கு மிகுந்த இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், அந்நாட்டு சர்வாதிகார அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது. இந்நடவடிக்கை எகிப்திய அரசுக்கும், தடைச் செய்யப்பட்ட இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்குமிடையேயான உறவில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் எகிப்தில் நெடுங்காலமாக தடைச் செய்யப்பட்ட இயக்கமாகும். ஆனால், வலுவான கட்டமைப்பைக் கொண்டது. தற்பொழுது நடந்துவரும் மக்கள் திரள் போராட்டம் ஏற்படுத்திய நெருக்கடியினால் முபாரக்கின் அரசு தனது கசப்பான எதிரியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது.

இந்நடவடிக்கை அவ்வமைப்பிற்கு அதிகரித்துவரும் செல்வாக்கை காட்டுகிறது. "நாங்கள் இன்று பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளப் போகிறோம்" என AFP செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான எஸ்ஸாம் எல் எரியான் தெரிவித்துள்ளார்.

எகிப்தில் மக்கள் திரள் போராட்டத்தைத் தொடர்ந்து சர்வாதிகாரி முபாரக்கினால் நியமிக்கப்பட்ட துணை அதிபர் உமர் சுலைமான் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் உள்பட எதிர்கட்சியினரை சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

முபாரக்கை மாற்றிவிட்டு புதிதாக தேர்தலை நடத்துவதற்குரிய ஜனநாயகரீதியிலான சீர்திருத்தங்களைக் குறித்து விவாதிக்க இந்த சந்திப்புக்கு உமர் சுலைமான் ஏற்பாடுச் செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

"நாங்கள் பேச்சுவார்த்தைக்கு செல்கிறோம். ஆனால், அது இளைஞர்களையும் சந்திக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடியதாகும்.

கடந்த ஜனவரி 28-ஆம் தேதி முதல் தஹ்ரீர் சதுக்கத்தில் முபாரக்கின் ராஜினாமாவைக் கோரி போராட்டம் நடத்திவரும் இளைஞர்களின் பிரதிநிதியையும் பங்கேற்கச் செய்யவேண்டும். இளைஞர்களை சந்திக்க மறுத்தால் நாங்கள் எங்கள் முடிவை மறுபரிசீலனைச் செய்ய நேரிடும்." இவ்வாறு எரியான் கூறியுள்ளார்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் இன்னொரு தலைவர் தெரிவிக்கையில், "நாங்கள் பேச்சுவார்த்தையை துவக்குவது என முடிவுச் செய்துள்ளோம். மக்களின் கோரிக்கையில் எதனை அவர்கள் ஏற்க தயாராகயிருக்கிறார்கள் என்பதை கண்காணிப்போம். இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க சம்மதித்தன் நோக்கம், உள்நாட்டு பிரச்சனையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகளின் தலையீட்டை தவிர்ப்பதற்காகும்." என்றார் அவர்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான முஹம்மது முர்ஸி கூறுகையில், எங்களது அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின், முபாரக் ராஜினாமாச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளது என்றார்.

அல்ஜஸீராவின் கெய்ரோ செய்தியாளர் கூறுகையில், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் பங்கேற்கும் இப்பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார். அவர்கள் முபாரக்கின் ராஜினாமாவைக் கோருவார்கள்.

பாராளுமன்றத்தை முடக்குதல், கடந்த சில நாட்களாக மக்கள் திரள் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்துதல், மேலும் அமைதியாக நடைபெறும் போராட்டத்தை அனுமதித்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அல்ஜஸீராவின் அலெக்சாண்ட்ரியா (இது முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் வலுவாக காலூன்றியுள்ள பகுதியாகும்) செய்தியாளர் தெரிவிக்கையில், பெரும்பாலான மக்கள், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதுக் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர் என்கிறார்.

செய்தி:AFP, ALJAZEERA


நான் பதவி விலகினால் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஆட்சியை

கெய்ரோ,பிப்.6:எகிப்தில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கை ஆட்சியிலிருந்து அகற்ற நடந்துவரும் மக்கள் திரள் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகுவதற்கு மறுத்து வருகிறார்.

இந்நிலையில் ABC தொலைக்காட்சியின் எகிப்திய செய்தியாளர் கிறிஸ்டியன் அமன்பூருக்கு 30 நிமிடங்கள் அளித்த பேட்டியில் முபாரக், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கோரிக்கைக் குறித்து பேசுகையில், "ஒபாமா சிறந்த மனிதர். ஆனால் அவருக்கு எகிப்திய கலாச்சாரத்தைக் குறித்து தெரியாது. நான் பதவி விலகினால் இஸ்லாமிய இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஆட்சியை கைப்பற்றிவிடும்.

எகிப்தில் நான் 62 காலமாக எகிப்தில் சேவையாற்றி வருகிறேன். எகிப்தியர்கள் தங்களுக்குள் மோதுவதுக் குறித்து கவலையாக உள்ளது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுக் குறித்து கவலையில்லை. எகிப்தைக் குறித்து கவனம் செலுத்துகிறேன்." இவ்வாறு கூறியுள்ளார் முபாரக்.

ABC NEWS
http://www.youtube.com/watch?v=JryLoAiicEg


எகிப்து:இஸ்ரேலுக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாயில் குண்டுவெடிப்பு

கெய்ரோ,பிப்.6:எகிப்து நாட்டின் அல் அர்ஸ் பகுதியில் இஸ்ரேலுக்கு கொண்டுச் செல்லப்படும் இயற்கை எரிவாயு குழாயின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது.

நிலைமை மோசமடைவதாகவும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்லும் இயற்கை எரிவாயுக் குழாய் முழுவதுமாக வெடித்துச் சிதறுவது அதிகரித்து வருவதாகவும் அரசுத் தொலைக்காட்சி கூறுகிறது. இதனை தீவிரவாத தாக்குதல் என அரசுத் தொலைக்காட்சி கூறுகிறது.

இத்தாக்குதலின் பொறுப்பை எவரும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தீயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.

வானத்தை நோக்கி 20 மீட்டர் உயரத்தில் அக்னி பிழம்புகள் எழும்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

1979-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையின் படி இஸ்ரேலுக்கு தேவையான 40 சதவீத இயற்கை எரிவாயுவை அளித்துவருவது எகிப்தாகும். இச்சம்பவத்தைக் குறித்து பரிசோதனைச் செய்வதாக இஸ்ரேல் தேசிய அடிப்படை வசதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் எகிப்து இஸ்ரேலுக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயுவை அளிப்பதற்கான 1000 கோடி டாலர் தொகை மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

மேற்காசியாவின் சூழ்நிலை பாதுகாப்பாக இல்லை எனவும், பிறரை எதிர்பார்க்காமல் தங்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிச்செய்வோம் எனவும் கடந்த புதன்கிழமை இஸ்ரேலின் தேசிய அடிப்படை வசதித்துறை அமைச்சர் உஸி லான்றோவோ தெரிவித்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை - பாகிஸ்தான்


இஸ்லாமாபாத்,பிப்.6:குண்டுவெடிப்பு வழக்குகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கினை வெளிக்கொணர்வதற்கான துணிச்சல் இந்தியாவிடம் இல்லை என்பதை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு விசாரணை நிரூபிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

பூடான் தலைநகர் திம்புவில் இன்று இந்தியா-பாகிஸ்தான் வெளிநாட்டு செயலாளர் மட்ட பேச்சுவார்த்தை நடக்கவிருக்கையில் பாகிஸ்தான் இவ்வறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கும், அவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சிலருடனான தொடர்பும் வெளிக்கொணர்வதில் இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

2007-ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு விசாரணையில் எங்களுக்கு பெரிய அளவிலான எதிர்ப்பார்ப்பு ஒன்றும் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல்பாஸித் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு நடந்த மும்பைத்தாக்குதலைத் தொடர்ந்து ஸ்தம்பித்த பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவதற்கான முயற்சியாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஸல்மான் பஷீரும் பூட்டான் தலைநகரான திம்புவில் இன்று பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார்கள்.

மும்பைத் தாக்குதலைக் குறித்த புலனாய்வு மற்றும் விசாரணையின் புதிய விபரங்களை இந்தியா பாகிஸ்தானிடம் கேட்கும்.

கடந்த ஆண்டும் இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பாகிஸ்தானில் வைத்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பிறகு முதன்முதலாக இருநாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தையாகும் இது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுக்கொண்டிருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸில் நடந்த குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்த முக்கிய தீவிரவாதியான அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பிறகு பாகிஸ்தான், இந்தியாவிடம் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவும், விசாரணை விபரங்களை ஒப்படைக்கவும் கோரிக்கை விடுத்திருந்தது.

பாகிஸ்தானுக்கெதிராக தீவிரவாதக் குற்றச்சாட்டை பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தும் இந்தியாவுக்கு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் விசாரணையை பூர்த்திச் செய்யக்கூட இயலாதது வருத்தத்திற்குரியது என அப்துல் பாஸித் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நிகழ்ந்து நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும் விசாரணை பூர்த்தியாகவில்லை என இந்தியா கூறுகிறது. இனியும் எவ்வளவு ஆண்டுகள் ஆகும் தாக்குதலில் பலியான 68 பேர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க? - கேள்வி எழுப்புகிறார் அப்துல் பாஸித்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

எகிப்து, யெமன் அரசுக்கெதிராக ஹேக்கர்கள் நடத்தும் போராட்டம்

கெய்ரோ,பிப்:இணையதளத்தில் கூடுதல் சுதந்திரம் வேண்டுமென வாதாடும் அனானிமஸ் (அநாமதேயர் குழுமம்) குரூப்பைச் சார்ந்த ஹாக்டிவிஸ்டுகள் (சமூக மாற்றத்திற்காக ஹேக்கிங் செய்பவர்கள்) எகிப்து, யெமன் அரசுக்கெதிராக திரும்பியுள்ளனர்.

இவர்களின் தாக்குதலில் யெமன் நாட்டு சர்வாதிகார அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் இணையதளம் செயலிழந்துள்ளது.

எகிப்து நாட்டின் ஆளுங்கட்சி மற்றும் செய்தி ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணையதளம் ஆகியன ஏற்கனவே ஹாக்டிவிஸ்டுகளின் தாக்குதலுக்கு உள்ளாகின.

கடந்த மாதம் துனீசிய அரசின் இணையதளத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசேஞ்ச் நோபல் பரிசுக்கு பரிந்துரை



நார்வே உலக நாடுகள் பலவற்றின் ரகசியங்களை அம்பலபடுத்திய விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
நார்வேயை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷ்னார் வேலன் என்பவர் தான் அசேஞ்சேயின் பெயரை சிபாரிசு செய்துள்ளார். அசேஞ்சேயின் இந்த செயல் கருத்து சுதந்திரம், தகவலறியும் உரிமை, ஜனநாயக உரிமைகளை நிலை நாட்ட பயன்பட்டதாக ஷ்னார் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனின்யா நாட்டின் 24 ஆண்டு கால சர்வாதிகார அரசை முடிவுக்குக் கொண்டுவந்ததில் பெரும் பங்கு விக்கிலீக்சுக்கு உண்டு என அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், நோபல் பரிசு குழு இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பாமல் இருந்து வருகிறது. ஸ்வீடன் நாட்டில் பாலியல் புகாருக்கு ஆளாகி, பிரிட்டனில் கைது செய்யப்பட்டவர் என்பதனாலும் அமெரிக்க இராணுவ ரகசியங்களை திருடியவர் என்ற குற்றச்சாற்றுக்கும் ஆளானவர் என்பதாலும் பரிசு குழு இது விசயத்தில் அமைதிகாத்து வருகிறது

பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தானில் மந்திரிசபை கலைப்பு

இஸ்லாமாபாத், பிப். 5-
பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பாகிஸ்தானில் மந்திரிசபை கலைக்கப்படுகிறது.  
பாகிஸ்தானில் பெனசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி மந்திரிசபை ஆட்சியில் உள்ளது. அதிபராக பெனசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரி உள்ளார். யூசுப் ரசா கிலானி பிரதமராக பதவி வகிக்கிறார். தற்போது, இவரது அமைச்சரவையில் 50-க்கும் மேற்பட்டோர் மந்திரிகளாக உள்ளனர். பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. லஞ்ச ஊழல் பெருகிவிட்டது. எனவே, தற்போதுள்ள பெரிய அளவிலான மந்திரிசபையை கலைத்து விட்டு சிறிய மந்திரி சபையை அமைக்க வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் செரீப்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்தும் பிரதமர் கிலானி அவர்களின் கோரிக்கைக்கு பணிந்தார். எனவே தனது மந்திரிசபையை கலைக்க முடிவு செய்துள்ளார். இந்த முடிவு ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தனது அமைச்சரவையில் உள்ள அனைத்து மந்திரிகளையும் ராஜினாமா செய்யும்படி பிரதமர் கிலானி கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி அனைத்து மந்திரிகளும் தங்களது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்துள்ளனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதிய மந்திரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் பதவி ஏற்க உள்ளனர். அனேகமாக 10 முதல் 15 பேர் மட்டுமே மந்திரிகளாக நியமிக்கப்படுவார்கள் என தெரிகிறது. இந்த தகவலை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜஹாங்கீர்பாதர் தெரிவித்துள்ளார்

காஷ்மீரில் இராணுவம் சுட்டு இளைஞர் பலி


குப்வாரா காஷ்மீரின் வட பகுதியில் உள்ள குப்வாரா மாவட்டம் சோகல் என்ற இடத்தில், நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி நடந்த வந்த 22 வயது இளைஞரை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
தனது இல்லத்தில் இருந்து வெளியே நடந்த வந்த மன்சூர் அகமது மாக்ரே, இராணுவம் விடுத்த எச்சரிக்கைக்கு செவி மடுக்காமல் தொடர்ந்து நடந்து சென்றதையடுத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய இராணுவத்தின் 4வது பாரா படைப்பிரிவு கூறியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாக்ரே சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குப்வார மாவட்டத்தின் ஹண்டுவாரா நகரத்தில் பதற்றம் நிலவுகிறது.
இதேபோல் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி, இளைஞர் ஒருவர் இராணுவத்தால் சுடப்பட்டு இறந்தார். அதுவும் குப்வாரா மாவட்டத்தில்தான் நடந்தது. இது தொடர்பாக 4வது பாரா பிரிவு மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இராணுவம் துப்பாக்கியால் சுட்டு மேலும் ஒரு இளைஞர் பலியாகியிருப்பதை கண்டித்துள்ள காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, இந்திய இராணுவத்தின் ஒருங்கிணைந்த கட்டளைத் தலைமையிடம் தான் கூறிய ஆலோசனை ஏற்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் என்ன ஆலோசனை வழங்கினார் என்பதை தெரிவிக்கவில்லை

6.2.11

எகிப்து துணை அதிபரை கொலை செய்ய முயற்சி

கெய்ரோ, பிப். 5-
எகிப்து துணை அதிபர் ஒமர் சுலைமானை கொலை செய்ய நடந்த சதியில் அவரது மெய்காப்பாளர்கள் 2 பேர் இறந்தனர். எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி அங்கு பெரும் கிளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் துணை அதிபரை கொலை செய்ய நடந்துள்ள முயற்சி பதட்டத்தை அதிகரித்துள்ளது.
அதிபர் முபாரக் பதவி விலகக் கோரி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வரை அவருக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று முபாரக் கூறி விட்டார். அமெரிக்க அதிபர் ஒபாமாவும், முபாரக்கை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டும் கூட அதை முபாரக் நிராகரித்து விட்டார்.
இந்த நிலையில் துணை அதிபர் ஒமர் சுலைமானைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. ஆனால் அதில் அவர் உயிர் தப்பி விட்டார். மாறாக அவரது மெய்க்காப்பாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் எகிப்தில் நிலைமை மேலும் பதட்டமாகியுள்ளது. இந்த நிலையில் கெய்ரோவில் உள்ள சுதந்திர சதுக்கத்தை விட்டு வெளியேறுமாறு ராணுவம் கூறியதை அந்த நாட்டு மக்கள் நிராகரித்துள்ளனர். மாறாக லட்சக்கணக்கானோர் கூடி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 11 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எகிப்து நாட்டில் நடைபெற்று வரும் கலவரத்தில் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் மாற்றத்தின் மூலம் தான் அங்கு அமைதியை நிலைநாட்ட முடியும். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வந்தால் எகிப்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையை கைவிட வேண்டும் என ஒபாமா கூறியுள்ளார்.
இந்த நிலையில் அதிபர் 

சுவாமி அசீமானந்த் வாக்குமூலம் கசிவு: சிபிஐ இயக்குநருக்கு நோட்டீஸ்

புதுடெல்லி, பிப். 5-
சுவாமி அசீமானந்த் வாக்குமூலம் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி என்பது குறித்து பதிலளிக்குமாறு சிபிஐ இயக்குநருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுவாமி அசீமானந்த் கடந்த டிசம்பர் 18-ல் அளித்த வாக்குமூலம் தெகல்கா பத்திரிகையில் வெளியானது. நீதிமன்ற விசாரணையைத் தடம்புரளச் செய்யும் நோக்கத்துடன் வாக்குமூலம் வெளியிடப்பட்டுள்ளதால் இது தொடர்பாக சிபிஐ கூடுதல் எஸ்.பி. டி.ஆர்.பாலாஜி, தெகல்கா பத்திரிகையின் உரிமையாளர், பதிப்பாளர், ஆசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். ஊழியர் தேவேந்திர குப்தா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சஞ்சய் பன்சால் கூறியதாவது:
எந்தவிதமான சூழ்நிலையில் சுவாமி அசீமானந்த் வாக்குமூலம் ஊடகத்துக்கு கசியவிடப்பட்டது என்பதை விளக்குமாறு சிபிஐ இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன். இதற்கான பதிலை பிப்ரவரி 15-க்குள் சிபிஐ இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும் என்றார். பின்னர், சிபிஐ கூடுதல் எஸ்.பி., தெகல்கா பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்த தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்தார்

அமெரிக்க தூதரகம் முன்பு அமெரிக்க கொடி எரிப்பு: 50 பேர் கைது

சென்னை, பிப். 5-
அமெரிக்காவில் இந்திய மாணவர்களை கண்காணிப்பதற்காக அவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் தங்கி படிக்கும் இந்திய மாணவர்களை கண்காணிப்பதற்காக அவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதைக் கண்டித்து போராட்டங்கள் நடக்கின்றன. சென்னையில் நேற்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் முன்னணி, இந்திய மாணவர் கூட்டமைப்பு ஆகிய இயக்கங்கள் சார்பில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு மறியல் முயற்சி நடந்தது. சுமார் 50 பேர் திரண்டு வந்தனர். அண்ணா மேம்பாலம் அருகே இவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். திடீரென்று அமெரிக்க கொடியை தீ வைத்து கொளுத்தினார்கள். பின்னர் அமெரிக்காவுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் அண்ணாசாலையில் நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

மத்தியபிரதேசத்தில் போர் விமானம் விழுந்து நொறுங்கியது

குவாலியர், பிப். 5-
மத்தியபிரதேசத்தில் போர் விமானம் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் விமானி உயிர் தப்பினார்.
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள மகாராஜாபூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 11.15 மணிக்கு மிக்-21 ரக பைசன் சூப்பர் சானிக் ஜெட் போர் விமானம் ஒன்று கிளம்பியது. 11.20 மணிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தின் அடர்ந்த காட்டுக்குள் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. ஆனால், விமானம் கீழே விழுவதற்கு முன்னதாக விமானி கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விமானத்தின் பாகங்கள் சுமார் 500 சதுர மீட்டர் பரப்பளவில் சிதறிக்கிடந்தன. தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் ஒரு ஹெலிகாப்டரில் அங்கு விரைந்தனர். அவர்கள் விமானத்தின் நொறுங்கிய பாகங்களை சேகரித்தனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது

இலங்கை சுதந்திர தினவிழாவை எதிர்கட்சிகள் புறக்கணித்தன

கொழும்பு, பிப். 6 இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், எதிர்கட்சி தலைவருமான சரத் பொன்சேகாவை சிறையிலிருந்து விடுவிக்க, அரசு மறுத்து விட்டதை கண்டித்து சுதந்திர தின விழாவை எதிர்கட்சிகள் புறக்கணித்தனர்.
இலங்கையின் 63வது ஆண்டு சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கட்டாராகமா என்ற இடத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு அதிபர் ராசபக்சே உரையாற்றுகையில், "இலங்கை 2 ஆயிரத்து 500 ஆண்டு பாரம்பரியம் மிக்க நாடு. இயற்கையாகவே மற்றவர்களை பாதுகாக்கவும் போற்றவும் வகையில் அமைந்தது நமது பாரம்பரியம். மனித உரிமையை மதிப்பது என்பது நமது தாய் மண்ணோடு கலந்துவிட்ட ஒரு பண்பு. மற்ற நாடுகளின் உதவியை பாராட்டுகிறேன். நம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன். அடுத்த நான்கு ஆண்டுகளில் நமது நாட்டின் ஆண்டு வருமானம் இரண்டு மடங்காக உயரும்" என்றார்.
முன்னாள் ராணுவ தளபதியும், எதிர்கட்சி தலைவருமான சரத்பொன்சேகா ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆயிரத்து 669 கைதிகள் பொது மன்னிப்பின் பேரில் நேற்று விடுவிக்கப்பட்டனர். இதே போல சரத் பொன்சேகாவையும் விடுவிக்கும்படி எதிர்கட்சியினர் கோரியிருந்தனர். ஆனால், அரசு, பொன்சேகாவை விடுதலை செய்ய மறுத்து விட்டது. இதை கண்டித்து எதிர்கட்சி தலைவர்கள் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை புறக்கணித்துள்ளனர்

5.2.11

முஸ்லிம் இனப்படுகொலையை நடத்த மோடியின் வீட்டில் ரகசியக் கூட்டம் - எஸ்.ஐ.டி


புதுடெல்லி,பிப்.5:கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி இரவு முதல்வரின் வீட்டில் வைத்து குஜராத் மூத்த அரசு அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு ((SIT Report)) உறுதிச் செய்துள்ளது.

இந்த ரகசியக் கூட்டத்தில் வைத்துதான் முஸ்லிம்களை அதிகமாக கொலைச் செய்வதற்கும், அதற்காக அரசு துறைகளை செயலிழக்க வைக்கவும் நரேந்திர மோடியும் அவரது கும்பலும் தீர்மானித்தது என குல்பர் சொசைட்டியில் கொடூரமாக் கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான்
ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இதனை மோடி மறுத்துவந்தார்.

27.02.02 அன்று கோத்ராவுக்கு சென்று அஹ்மதாபாத் திரும்பிய பிறகு ரகசியக் கூட்டத்தை கூட்டினார் என ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் நடத்திய விசாரணை விபரங்கள் இவ்வறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

மோடி, முதன்மைச் செயலாளரின் பொறுப்புவகித்த ஸ்வர்ணகாந்த்வர்மா, உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பேற்றிருந்த கூடுதல் முதன்மைச் செயலாளர் அசோக் நாராயணன், டி.ஜி.பி.கே.சதுர்வேதி, அஹ்மதாபாத் போலீஸ் கமிஷனர்
பி.சி.பாண்டே, உள்துறைச் செயலாளர் கெ.நித்யானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஷ்ரா, மோடியின் செயலாளர் அனில் முகிம் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஸ்வர்ணகாந்த் வர்மா, அசோக் நாராயணன் ஆகியோரை விசாரித்த பொழுது கேட்கப்பட்ட, ஹிந்துக்களுக்கு தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டுமென முதல்வர் கட்டளையிட்டாரா? என்ற கேள்வியை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ இருவரும் தயாராக இல்லை என எஸ்.ஐ.டியின்
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மிஷ்ராவை குஜராத் மின்சாரா வாரிய ஒழுங்குமுறை கமிஷனின் செயலாளராகவும், பி.சி.பாண்டேயை போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் தலைவராகவும் குஜராத் மோடி அரசு நியமித்தது.

தற்போதைய குஜராத் மாநில போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக செயல்படுகிறார் நித்யானந்தம். முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு அசோக் நாராயணன் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். மோடி மற்றும் குஜராத் அரசுக்கெதிராக எதுவும் பேசாமலிருக்கத்தான் பாண்டே, மிஷ்ரா, அசோக் நாராயணன் ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டன.

இனப்படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து குஜராத் ரெவனியூ அமைச்சராக இருந்த ஹரண் பாண்டியா, நீதிபதி ஹோஸ்பேட் சுரேஷ், நீதிபதி பி.பி.சாவந்த் ஆகியோர் சுதந்திர தீர்ப்பாயத்திடம் வாக்குமூலம் அளித்தையும் எஸ்.ஐ.டியின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பாண்டே கொல்லப்பட்டிருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கண் அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த வாசன் மருத்துவமனை


ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு யாரும் செய்திராத ஒரு அறுவை சிகிச்சையை செய்து சாதனை படத்திருக்கிறது சென்னை, வாசன் கண் சிகிச்சை மையம்.

வெளியேற மறுக்கிறார் அதிபர் முபாரக்: தொடர்கிறது போராட்டம்

கெய்ரோ :எகிப்து அதிபர் முபாரக்கை உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று மீண்டும் லட்சக்கணக்கானோர் தாரிர் சதுக்கத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், தற்போதைய துணை அதிபர் ஒமர் சுலைமானை அதிபராக்குவது குறித்து, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.மேலும் படிக்க தலைப்பை கிலிக் செய்யவும்.

முபாரக் பதவி விலக ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை

கெய்ரோ, பிப். 4-
எகிப்து நாட்டில் உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை என, ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தியுள்ளன.
இது குறித்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஒன்றாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எகிப்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டனத்துக்குரியது. எகிப்து நாட்டு மக்கள் அமைதியான முறையில் பார்லிமென்டை நடத்தும் சூழல் ஏற்பட வேண்டும். பாதுகாப்பு படையினரின் முழு ஒத்துழைப்பு அவர்களுக்கு தேவை. எகிப்தில் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. எனவே, அங்கு உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை. இதன் மூலம் தான் தற்போது அங்கு நிலவும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். எகிப்தில் வன்முறையை தூண்டுவோரின் செயலும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு ஐரோப்பிய நாடுகள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் முகாமிட்டுள்ள போராட்டக்காரர்களுக்கும், அதிபர் முபாரக் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில், 10 பேர் கொல்லப்பட்டனர்.
தரிர் சதுக்கத்தில் கொட்டும் பனியிலும் மக்கள், அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தியபடி உள்ளனர். இவர்களுக்கு எதிராக முபாரக்கின் ஆதரவாளர்கள் கல்லெறிந்தும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்தும் துப்பாக்கி குண்டுகளும், வெடிகுண்டுகளும் பறந்தன. இந்த வன்முறையில் 10 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. தரிர் சதுக்கத்தில் கிடந்த மூன்று சடலங்களை ஆம்புலம்ஸ் வாகனங்கள் சுமந்து சென்றன. தரிர் சதுக்கத்தைச் சுற்றிலும் ராணுவ கவச வாகனங்கள் முகாமிட்டுள்ளன. ஆனால், இந்த வன்முறையை அடக்க அவை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு சில சமயங்களில் மட்டும் வானத்தை நோக்கி பீரங்கிகள் சுடும் ஓசை கேட்கிறது.

ஜெர்மன் வங்கியில் கறுப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பட்டியல் வெளியீடு


புதுடெல்லி, பிப்.5                                    -கருப்பு பணத்தை வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டும் அதனை வெளியிட முடியாது என்றும் பட்டியலை வெளியிடுவதில் சட்டசிக்கல் உள்ளதாகவும் பிரணாப்முகர்ஜி கூறியிருந்தார்.
 
இந்நிலையில்  ஜெர்மன் நாட்டில் உள்ள எல்.ஜி.டி. வங்கியில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் 18 பேரின் பெயர்கள் அடங்கிய ரகசிய பட்டியலை ஜெர்மன் அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டது.
 
இந்த விவரம் சீலிடப்பட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெர்மன் வங்கியில் கறுப்பு பணம் போட்டிருக்கும் 18 பேரில் 15 பேரின் பெயர் பட்டியலை தெகல்கா என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள இந்தியர்கள் வருமாறு:-
 
1.மனோஜ் துபுலியா 2.ருபால் துபுலியா, 3.மோகன் துபுலியா, 4.ஹஸ்முக்காந்தி, 5.சிந்தன்காந்தி, 6.திலீப் மேத்தா, 7.அருண் மேத்தா, 8.அருண் கோசார், 9.குன்வாந்தி மேத்தா, 10.ரஜினிகாந்த் மேத்தா, 11.பிரபோத் மேத்தா, 12.அசோக் ஜெபுரியா, 13.ராஜ் பவுண்டேசன், 14.ஊர்வசி பவுண்டேசன், 15.அம்பூர்வனா அறக்கட்டளை ஆகியோர் பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளன