தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.2.11

எகிப்து துணை அதிபரை கொலை செய்ய முயற்சி

கெய்ரோ, பிப். 5-
எகிப்து துணை அதிபர் ஒமர் சுலைமானை கொலை செய்ய நடந்த சதியில் அவரது மெய்காப்பாளர்கள் 2 பேர் இறந்தனர். எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி அங்கு பெரும் கிளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் துணை அதிபரை கொலை செய்ய நடந்துள்ள முயற்சி பதட்டத்தை அதிகரித்துள்ளது.
அதிபர் முபாரக் பதவி விலகக் கோரி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வரை அவருக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று முபாரக் கூறி விட்டார். அமெரிக்க அதிபர் ஒபாமாவும், முபாரக்கை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டும் கூட அதை முபாரக் நிராகரித்து விட்டார்.
இந்த நிலையில் துணை அதிபர் ஒமர் சுலைமானைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. ஆனால் அதில் அவர் உயிர் தப்பி விட்டார். மாறாக அவரது மெய்க்காப்பாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் எகிப்தில் நிலைமை மேலும் பதட்டமாகியுள்ளது. இந்த நிலையில் கெய்ரோவில் உள்ள சுதந்திர சதுக்கத்தை விட்டு வெளியேறுமாறு ராணுவம் கூறியதை அந்த நாட்டு மக்கள் நிராகரித்துள்ளனர். மாறாக லட்சக்கணக்கானோர் கூடி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 11 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எகிப்து நாட்டில் நடைபெற்று வரும் கலவரத்தில் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் மாற்றத்தின் மூலம் தான் அங்கு அமைதியை நிலைநாட்ட முடியும். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வந்தால் எகிப்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையை கைவிட வேண்டும் என ஒபாமா கூறியுள்ளார்.
இந்த நிலையில் அதிபர் 

0 கருத்துகள்: