தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.2.11

சுவாமி அசீமானந்த் வாக்குமூலம் கசிவு: சிபிஐ இயக்குநருக்கு நோட்டீஸ்

புதுடெல்லி, பிப். 5-
சுவாமி அசீமானந்த் வாக்குமூலம் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி என்பது குறித்து பதிலளிக்குமாறு சிபிஐ இயக்குநருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுவாமி அசீமானந்த் கடந்த டிசம்பர் 18-ல் அளித்த வாக்குமூலம் தெகல்கா பத்திரிகையில் வெளியானது. நீதிமன்ற விசாரணையைத் தடம்புரளச் செய்யும் நோக்கத்துடன் வாக்குமூலம் வெளியிடப்பட்டுள்ளதால் இது தொடர்பாக சிபிஐ கூடுதல் எஸ்.பி. டி.ஆர்.பாலாஜி, தெகல்கா பத்திரிகையின் உரிமையாளர், பதிப்பாளர், ஆசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். ஊழியர் தேவேந்திர குப்தா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சஞ்சய் பன்சால் கூறியதாவது:
எந்தவிதமான சூழ்நிலையில் சுவாமி அசீமானந்த் வாக்குமூலம் ஊடகத்துக்கு கசியவிடப்பட்டது என்பதை விளக்குமாறு சிபிஐ இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன். இதற்கான பதிலை பிப்ரவரி 15-க்குள் சிபிஐ இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும் என்றார். பின்னர், சிபிஐ கூடுதல் எஸ்.பி., தெகல்கா பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்த தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்தார்

0 கருத்துகள்: