தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.2.11

இலங்கை சுதந்திர தினவிழாவை எதிர்கட்சிகள் புறக்கணித்தன

கொழும்பு, பிப். 6 இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், எதிர்கட்சி தலைவருமான சரத் பொன்சேகாவை சிறையிலிருந்து விடுவிக்க, அரசு மறுத்து விட்டதை கண்டித்து சுதந்திர தின விழாவை எதிர்கட்சிகள் புறக்கணித்தனர்.
இலங்கையின் 63வது ஆண்டு சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கட்டாராகமா என்ற இடத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு அதிபர் ராசபக்சே உரையாற்றுகையில், "இலங்கை 2 ஆயிரத்து 500 ஆண்டு பாரம்பரியம் மிக்க நாடு. இயற்கையாகவே மற்றவர்களை பாதுகாக்கவும் போற்றவும் வகையில் அமைந்தது நமது பாரம்பரியம். மனித உரிமையை மதிப்பது என்பது நமது தாய் மண்ணோடு கலந்துவிட்ட ஒரு பண்பு. மற்ற நாடுகளின் உதவியை பாராட்டுகிறேன். நம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன். அடுத்த நான்கு ஆண்டுகளில் நமது நாட்டின் ஆண்டு வருமானம் இரண்டு மடங்காக உயரும்" என்றார்.
முன்னாள் ராணுவ தளபதியும், எதிர்கட்சி தலைவருமான சரத்பொன்சேகா ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆயிரத்து 669 கைதிகள் பொது மன்னிப்பின் பேரில் நேற்று விடுவிக்கப்பட்டனர். இதே போல சரத் பொன்சேகாவையும் விடுவிக்கும்படி எதிர்கட்சியினர் கோரியிருந்தனர். ஆனால், அரசு, பொன்சேகாவை விடுதலை செய்ய மறுத்து விட்டது. இதை கண்டித்து எதிர்கட்சி தலைவர்கள் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை புறக்கணித்துள்ளனர்

0 கருத்துகள்: