தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.2.11

அமெரிக்க தூதரகம் முன்பு அமெரிக்க கொடி எரிப்பு: 50 பேர் கைது

சென்னை, பிப். 5-
அமெரிக்காவில் இந்திய மாணவர்களை கண்காணிப்பதற்காக அவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் தங்கி படிக்கும் இந்திய மாணவர்களை கண்காணிப்பதற்காக அவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதைக் கண்டித்து போராட்டங்கள் நடக்கின்றன. சென்னையில் நேற்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் முன்னணி, இந்திய மாணவர் கூட்டமைப்பு ஆகிய இயக்கங்கள் சார்பில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு மறியல் முயற்சி நடந்தது. சுமார் 50 பேர் திரண்டு வந்தனர். அண்ணா மேம்பாலம் அருகே இவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். திடீரென்று அமெரிக்க கொடியை தீ வைத்து கொளுத்தினார்கள். பின்னர் அமெரிக்காவுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் அண்ணாசாலையில் நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

0 கருத்துகள்: