தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.1.12

சென்னை எழிலக கட்டடத்தில் நள்ளிரவு தீ விபத்து – தீயணைப்பு வீரர் பலி


சென்னை:சென்னை சேப்பாக்கத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கும் எழிலகம் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீயை அணைக்கச் சென்ற மீட்புப் படை வீரர் ஒருவர். தீயில் சிக்கி பலியானார். மேலும் தீயணைப்புத்துறை பெண் உயர் அதிகாரி உட்பட இருவர், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எழிலகக் கட்டடத்தில் முக்கிய அரசுத்துறை அலுவலங்கள் அமைந்துள்ளன. நள்ளிரவில் சமூக நலத்துறை மற்றும் தொழில் வணிகத்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் முக்கிய ஆவணங்களும் எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தீவிபத்து குறித்து எழிலக கட்டிடத்தின் காவலாளி தீயணைப்புப் படையினருக்கு கொடுத்தார்.  தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
கொழுந்துவிட்டு எரிந்த தீ ஒரு மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்து தீயணைப்புப் படையின் சென்னை மத்திய மண்டல அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், இரவு 1.30 மணிக்கு கட்டடத்துக்குள் நுழைந்தார். அப்போது, திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அவருடன் உள்ளே நுழைந்த தீயைணப்புப் படை வீரர் அன்பழகன் (55), அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
பிரியா உட்பட மூன்றுபேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்: