தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.1.12

இத்தாலி கப்பலின் கேப்டன் கைது செய்யப்பட்டார் : கொலைக் குற்றம்


நேற்று முன்தினம் இத்தாலிய கரையில் கவிழ்ந் துபோன கோஸ்ரா கொன்கோடியா என்ற இந்தப் பிரமாண்டமான கப்பல் விபத்து தொடர்பான விப ரங்கள் வெளியாகி வருகின்றன. மேற்கண்ட கப் பலை அதன் தலைமைமாலுமி மடைத்தனமான முறையில் ஆழம் குறைந்த கடல் பகுதிக்குள் நுழைத்து சென்றதே விபத்து ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது. கப்பலின்
கேப்டன் பிரான்சிஸ்கோஸெற்றினோ கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளார். நேற்று இவர் போலீசாரால் கைதும் செய்யப்பட்டுள்ளார். இது இவ்விதமிருக்க இதுவரை 17 பேர் தேடப்படுகிறார்கள். ஆனால் கடலடித்தளத்தைக் காட்டும் வரைபடத்தில் இப்பகுதியில் திட்டு இருப்பதாக வரையப்படவில்லை என்று கேப்டன் தெரிவிக்கிறார். திட்டமிடாத மனிதப் படுகொலை குற்றம் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: