தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.10.11

கடாபியின் மகன் கைது பெங்காஸி சிறையில் அடைப்பு


கடாபி பிறந்த நகரான சிற்றாவில் நடைபெறும் போர் முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. நகரத்தின் முக்கிய கட்டிடங்களை போராளிகள் கைப்பற்றியுள்ளார்கள். இந்தப் போரில் கடாபியின் மகன்களில் ஒருவரான மொற்றாசிம் கடாபி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ராய்டர் செய்திதாபனம் கூறுகிறது. போராளிகள் அமைப்பின் மூன்று தளங்களால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டதாகவும் அது கூறுகிறது. கைதானவர் தற்போது பெங்காஸி கொண்டு செல்லப்பட்டு சிறையிடப்பட்டுள்ளார். இவர் கடாபியின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடாபியின் இரண்டு மகன்கள் கைதானதாக பொய்ச் செய்தி வெளியிட்டு லிபிய போராளிகள் திரிப்போலிக்குள் நுழைந்தது தெரிந்ததே. இதுபோல சிற்றா நகருக்குள் நுழைந்ததும் போலியான செய்தியை பரப்புரை செய்திருக்கவும் வழியிருக்கிறது. கடாபியைப் போலவே போராளிகள் அமைப்பினரும் ஒழுக்கக் குறைவான தகவல்களை வெளியிடுவதில் வல்லவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: