தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.10.11

அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் மீது ஸ்ரீராம் சேனா மீண்டும் தாக்குதல்


பிரபல வக்கீலும் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவருமான பிரசாந்த் பூஷன் ராம் சேனாவை சேர்ந்தவர்களால் நேற்று தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஸ்ரீராம் சேனா ஆதரவாளர்கள் நேற்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திற்கு வெளியே அன்னா ஹசாரேவின்  ஆதரவாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதில்,  ராஜ்குமார் என்பவர்   கடுமையாக தாக்கப்பட்டார்.
உடனடியாக அவர் அருகில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அன்னா ஹசாரே ஆகஸ்ட் மாதம் ராம்லீலா மைதானத்த்தில் தனது 13 நாள் உண்ணாவிரதத்தை ராஜ்குமாரின் பேத்திகள் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: