தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.12.12

நேட்டோ தளம் மீது தாலிபான்களின் மிகப்பெரிய தாக்குதல்


நேற்று காலை ஆப்கானில் நேட்டோ படைத்தளத்தி ன் மீது தலபான்கள் பாரிய தற்கொலைத் தாக்குத லை நடாத்தினார்கள்.14 பேர் மடிந்துள்ளனர், இதில் ஆப்கான் படைகள் மூன்றுபேர் மற்றவர்கள் தாக்குத லை நடாத்தியோர், பல நேட்டோ படைகள் படுகாய மடைந்துள்ளனர். ஆப்கான் இராணுவ சீருடையுடன் ஐந்து சடலங்கள் கிடக்கின்றன.ஜலலாபாத்தில் உள் ள ஆப்கான் சிற்றி விமான நிலையத்திற்குள் காரில் நுழைந்த தற்கொலைக் குண்டுதாரி
இந்தநாடகத்தை அரங்கேற்றினார்.விமானநிலையக் கடவையில் குண்டு வெடித்தவுடன் துப்பா க்கி மோதல்கள் வெடித்தன சுமார் இரண்டு மணி நேரம் இந்த மோதல் நடைபெ ற்றுள்ளது.
மோட்டார் தாக்குதல், சாதாரண துப்பாக்கிகளின் மோதல், கிரனைட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நேட்டோ பாதுகாப்புப்பிரிவு தகவல்களின்படி சுமார் மூன்று குண்டு வெடிப்புக்கள் தொடர்ச்சியாக இடம் பெற்றுள்ளன.
2 தலபான் தற்கொலைக்குண்டுதாரிகள் முதல் தாக்குதலை நடாத்தி அடுத்த கட்ட தாக்குதலுக்கான வழியை திறந்தாக தலபான்களின் இணையத்தளமொன்று கூறுகிறது.
கடந்த 11 வருடங்களாக 100.000 நேட்டோ படைகளுடன் தலபான்கள் ஓய்வின்றி போர் நடாத்துவது கவனிக்கத்தக்கது.
கடந்த ஏப்ரல் 15ம் திகதியும் இந்த விமான நிலையம் தாக்குதலுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: