தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.2.12

இந்திய விமானப்படை விமானம் சென்னைக்கு அருகில் ஏரியில் வீழ்ந்தது


இந்திய விமானப் படையின் பயிற்சி விமானமொன்று சென்னைக்கு அருகிலுள்ள தாம்பரம் நகரில் ஏரியொன்றில் வீழ்ந்துள்ளது. இவ்விமானத்திலிருந்த இரு விமானிகளும் பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர். அவர்கள்; வீடொன்றின் கூரையிலிருந்துமீட்கப்பட்டபின்அருகிலுள்ள வைத்தியசா லையொன்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.தாம்பரம் நகரிலுள்ள விமானப்படைத் தளத்திலிருந்து வந்த கிரான் எம்.கே-2 ரக
விமானமொன்றே அச்சன்சேரி ஏரியில் வீழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக  இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரி
யொருவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: