தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.2.12

இந்தியா இலங்கை உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்கும் பாரிய கடற்போர்ப் பயிற்சி!


இலங்கை உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்கும் பாரிய கடற்போர்ப் பயிற்சி அந்தமான்- நிகோபார் கடற்பகுதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவின் ஏற்பாட்டில் 14 நாடுகள் கலந்து கொள்ளும் “மிலன்” என்ற பெயரிலான ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த போர்ப்பயிற்சி இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 6ஆம் திகதி நிறைவடையும். “மிலன்” என்ற பெயரில் 1995ம் ஆண்டு4 நாடுகளுடன் இணைந்து இந்தப் போர்ப்பயிற்சியைஆரம்பித்த இந்தியா, ஆண்டு தோறும்
இதனை நடத்தி வருகிறது.

இலங்கை, அவுஸ்ரேலியா, பங்களாதேஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, புறுணை, மியான்மர் ஆகிய ஒன்பது நாடுகள் இந்தியக் கடற்படையுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ள போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளன.

0 கருத்துகள்: