தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.1.12

வயது விவகாரம் : உச்சநீதிமன்றத்தை நாடினார் இந்திய இராணுவ தலைமை தளபதி

இந்திய இராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் மத்திய அர சை எதிர்த்து உச்சநீதிமன்றில் நேற்று வழக்கொன்றை தா க்கல் செய்தார்.அவருடைய பள்ளி சான்றிதழில், அவர் 195 1ம் ஆண்டு பிறந்தார் என்று, யு.பி.எஸ்.சி நுழைவு தேர்வு விண்ணப்பத்தில் 1950 இல் பிறந்தார் எனும் முரண்பாடாக இரு திகதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் அவர் 1950 ம் ஆண்டு தான் பிறந்தார் என முடிவெடுத்துள்ள மத்திய அரசு, எதிர்வரும் மே
மாதத்துடன் அவர் ஓய்வு பெற வேண்டும் என கூறியுள்ளது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வி.கே.சிங் தாக்கல் செய்த மனுவில், 1951ம் ஆண்டு தான் என்னுடைய உண்மையான பிறந்த நாள் என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தன்னுடைய பதவிக்காலம் தொடர்பான விவகாரம் அல்ல. 13 இலட்சம் இராணுவ வீரர்களுக்கு தலைமை தளபதியாக இருக்கும் என்னுடைய நேர்மை சம்பந்தப்பட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: