தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.10.11

சிகிச்சை முடிந்தது: எடியூரப்பா சிறையில் அடைப்பு


கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நில ஒதுக்கீட்டு ஊழல் புகாரில் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பெங்களூரில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறகு சிறைக்கு வெளியே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு 2 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்தபடியே எடியூரப்பா, கர்நாடக உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் நேற்று நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவரது உடல் தீவிர சிகிச்சையில் இருந்து நன்கு குணமானது. இதையடுத்து எடியூரப்பா ஆஸ்பத்திரியில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடனடியாக அவர் சிறைக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டார்.

0 கருத்துகள்: