தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.8.11

போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தும் போலீஸ் அதிகாரிகளை தூக்கிலிடவேண்டும் – உச்சநீதிமன்றம் காட்டம்


supreme court
புதுடெல்லி:போலி என்கவுண்டர் கொலைகளை நிகழ்த்தும் போலீஸ் அதிகாரிகளை தூக்கிலிடவேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இத்தகையதொரு கருத்தை வெளியிட்டுள்ளது.
போலி என்கவுண்டர் கொலை வழக்குகளில்

மாலேகான் குண்டுவெடிப்பு: ப்ரக்யாசிங் ஜாமீன் மனு நிராகரிப்பு!


 2008 ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாகூர் சமர்ப்பித்த ஜாமீன் மனுவை மோகா(MCOCA) நீதிமன்றம் நிராகரித்தது!


2008 ஆம் ஆண்டு மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாகூர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜாமீன் மனு கோரி வழக்கறிஞர்கள் மோகா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

விரல் ரேகை இல்லாத மனிதர்கள் !!

வாஷிங்டன்: விரல் ரேகை ஒருவரின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. ஒருவருக்கு உள்ளது போல விரல் ரேகை இன்னொருவருக்கு இருக்காது. அதனால்தான் மனிதர்களை அடையாளம் காண எல்லா நாடுகளும் விரல் ரேகைகளை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றன. விரல் ரேகையே இல்லாமலும் சிலர் இருக்கின்றனர். மிகமிக அரிதாக அப்படி நடப்பதுண்டு. 

மிக வேகமான இணைய உலாவி எது?


browser-7-13-lg2
Compuware’s  எனும் நிறுவனம் இணைய உலாவிகள் தொடர்பில் சில தரவுகளை வெளியிட்டுள்ளது.
1.86 பில்லியன் தனிப்பட்ட டெஸ்க்டாப் கணினி பாவனையாளர்களிடம் ஒரு மாத காலமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கூகிள் குரோம் உலாவியே மிக வேகமான உலாவியாக தேர்வாகியுள்ளது.

ஜெ.வுக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம்-10 நாட்களில் சமச்சீர் கல்வியை அமுல்படுத்த உத்தரவு


judge_gavel
டெல்லி:சமச்சீர் கல்வி திட்டத்தை இன்னும் 10 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம்.பான்சால், தீபக் வர்மா, பி.எஸ்.சௌகான் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது.
மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட

9.8.11

ஈராக்:அமெரிக்காவிற்கு அல் ஸத்ர் எச்சரிக்கை

பாக்தாத்:ஏற்கனவே அறிவித்துள்ள கால வரம்பிற்கும் மேலாக ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நீடித்தால் தாக்குவோம் என பிரபல ஷியா அறிஞர் முக்ததா அல்ஸத்ர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2011-ஆம் ஆண்டு ஈராக்கிலிருந்து வாபஸ் பெறுவோம் என அறிவித்துவிட்டு ஈராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரால் சிலரை நிரந்தரமாக நாட்டில் தங்கவைப்பதற்கு திட்டமிடவே ஸத்ரின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ஆக்கிரமிப்பு சக்திகளை தங்களது ஆயுதம் எதிர்கொள்ளும் என ஸத்ரை மேற்கோள்காட்டி எ.எஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

சுப்ரமணிய சுவாமியின் வீட்டின் மீது தாக்குதல்


ஜனதா கட்சியின் தலைவரும், அரசியல் கோமாளியுமான சுப்ரமணிய சுவாமி மும்பையை மையமாக கொண்டு செயல்படும் டி.என்.எ ஆங்கில இதழில் முஸ்லிம்களை குறித்து மிக மோசமான கட்டுரையை எழுதி தனது ஹிந்துத்துவ வெறித்தனத்தை வெளிப்படுத்தியிருந்தார். இக்கட்டுரை முஸ்லிம்கள் உள்பட மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும்

மலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாசல் திறக்கிறது


malegaon
மும்பை:2006-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான ஒன்பது முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்தவாரம் மும்பை மோக்கா நீதிமன்றத்தில் இவர்களின் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் வேளையில் ஜாமீனுக்கு மறுப்பு தெரிவிக்கவேண்டாம் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) முடிவுச்செய்துள்ளது.

லண்டன் வீதிகளில் வன்முறைகள்


லண்டனில் வழமையில் மிக அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்ற பல வீதிகளில் இரண்டாவது நாளாக, நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவும் வன்முறைச் சம்வங்கள் அங்காங்கே இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே, அவசரமாக தனது கோடை விடுமுறையை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள பிரிட்டனின் உட்துறை அமைச்சர் தெரஸா மே, மூத்த பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து கள

8.8.11

ரியாதில் நடந்த மாபெரும் இஃப்தார் சங்கமம்


image001
ரியாத் இந்தியா ஃபிரெடர்னிடி ஃபாரம் – ரியாத் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் விருந்து ( நோன்பு திறக்கும் நிகழ்ச்சி) கடந்த 05 ஆகஸ்ட் 2011 வெள்ளிக்கிழமை ரியாதில், அல்ஹைர் அல்உவைதா தோட்டத்தில் மாலை 6 மணியளவில் தொடங்கியது.
மகத்துவமிக்க ரமலானின் சிறப்புகள் குறித்து தமிழ், மலையாளம், கண்னடம் மற்றும் உருதுவில் சொற்பொழிவாற்றப்பட்டது

ஆர்.கே.ராகவனின் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு தகவல்களை கசியவிட்டது – சஞ்சீவ் பட்


godhra398_080711095438
புதுடெல்லி:முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவனின் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் குஜராத் இனப்படுகொலை தொடர்பான தகவல்களை ஆர்.எஸ்.எஸிற்கு கசியவிட்டதாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிறப்பு புலனாய்வு குழுவினர் குஜராத் கூடுதல் அட்வக்கெட் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு கசியச்செய்த தகவல்களை

முபாரக் மீதான விசாரணையில் இஸ்ரேலிய ஊடகங்களுக்கு கோபம்


imagesCAL15CLP
கெய்ரோ:மக்கள் எழுச்சிப் போராட்டத்தினால் பதவியிலிருந்து விலகிய முன்னாள் எகிப்து சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் மீதான விசாரணையில் இஸ்ரேலிய ஊடகங்கள் கடுமையான நிராசையையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை துவங்கிய

சோனியாவுக்கு, கர்ப்பப் பை வாய் புற்றுநோய்


காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர், நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சைக்கு பிரபலமான, “மெமோரியல் ஸ்லோன் – கெட்டரிங் கேன்சர் சென்டர்’ என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா, சமீப காலமாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை.

போலீஸால் உருவாக்கப்படும் ரவுடிகள்!


உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த, பல வருடங்களாக பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படைக் கூட்டத்தின் தலைவன் ஜக்கு பெஹெல்வான் என்பவனை மாநில போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

இந்த கொலைக்காரன் பணத்திற்காக இதுவரை சுமார் 165 க்கும் மேற்பட்டவர்களை கொன்றதாகவும், கொல்லப்பட்டோரில் பல தொழிலதிபர்களும், வர்த்தக காண்டிராக்டர்களும், ஓட்டல்

7.8.11

தாலிபான் தாக்குதலில் நேட்டோ ஹெலிகாப்டர் தகர்ந்தது -​ 38 பேர் மரணம்


85690201-update-us
காபூல்:கிழக்கு ஆப்கானிஸ்தானில் வார்தக் மாகாணத்தில் நேட்டோ ராணுவத்தின் ஹெலிகாப்டர் தகர்ந்து விழுந்ததில் அமெரிக்க சிறப்பு படையின் 31 பேரும், ஏழு ஆப்கானிஸ்தான் படையினரும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலின் பொறுப்பை தாலிபான் ஏற்றுக்கொண்டது.
நேட்டோ ராணுவத்துடனான போரில் நாங்கள்தாம் ஹெலிகாப்டரை வீழ்த்தினோம் என தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸஃபியுல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார். ராக்கெட் தாக்குதல் மூலம் ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பாதி முஸ்லிம்களும் பாரபட்சத்தை சந்திக்கிறார்கள்


வாஷிங்டன்:அமெரிக்காவின் முஸ்லிம் மக்கள் தொகையில் பாதி பேரும் இனரீதியான மதரீதியான பாரபட்சத்தை எதிர்கொள்கின்றார்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தை மையமாக கொண்டு செயல்படும் அபுதாபி காலப் செண்டர் நடத்திய ஆய்வில் 48 சதவீத அமெரிக்க முஸ்லிம்களும் தாங்கள் இனரீதியாக மதரீதியாக பாரபட்சத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டிற்கான புள்ளிவிபரமாகும்.
2001 செப்டம்பர் 11 நியூயார்க் உலக

சட்டவிரோத கட்டிட பணிக்கு இஸ்ரேல் அனுமதி


isreal occupied
டெல் அவீவ்:ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலமில் 900 வீடுகள் கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.
கிழக்கு ஜெருசலத்தில் ஹர் ஹோமாவில் சர்வதேச எதிர்ப்புகளை புறக்கணித்து சட்டவிரோதமாக யூத குடும்பங்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வசிப்பிட பிரதேசத்தில் நெருக்கடியை சமாளிக்க வீடுகள் கட்டப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்ற

4 இந்தியர்களை சுட்டுக் கொன்ற குவைத் போலீஸ்காரர் கைது


குவைத் நாட்டில் மனநிலைப் பாதிக்கப்பட்டவரால், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த நரேஷ்குமார், சித்தூரை சேர்ந்த ராமணய்யா மற்றும் மாசாகிரி ஓபுல்ரெட்டி, ராம்பீம் ஆகிய நான்கு பேரும் குவைத் நாட்டில் வேலை செய்து வந்தனர். கடந்த 1ம் தேதியன்று, குவைத்தில் ரம்ஜான் நோன்பு துவங்கியது. அன்று மாலை 4 பேரும் மனநிலை பாதிக்கப்பட்ட போலீஸ்காரர்

எப்.பி.ஐ.-யால் 40 ஆண்டுகளாக தேடப்படும் விமான கொள்ளையன்

வாஷிங்டன், ஆக. 7-   டி.பி. கூப்பர், இந்த பெயரை கேட்டால் அமெரிக்க புலானாய்வு அமைப்பிற்கு (FBI) எரிச்சல் வரும், 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விமான கடத்தல் மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அமெரிக்க வரலாற்றில் ஒரு விநோத வழக்காக அமைந்துவிட்டது. விமான கடத்தல்காரன், கொள்ளையனை எப்.பி.ஐ.யினர் இன்னும் தேடி வருகின்றனர். இது குறித்து அமெரிக்காவிலிருந்

இஷ்ரத் வழக்கு:ஒரு மாதத்திற்குள் விசாரணையை பூர்த்திச் செய்யவேண்டும்


2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேர் போலி என்கவுண்டரில் குஜராத் மோடி அரசின் போலீசாரால் அநியாயமாக கொலைச் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் எட்டாம் தேதிக்குள் பூர்த்திச்செய்ய வேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி)விற்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கில் சில முக்கிய சாட்சிகள் வாக்குமூலத்தை மாற்றியதுக் குறித்தும் விசாரணை நடத்த எஸ்.ஐ.டி தலைவருக்கு நீதிமன்றம்