தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.3.12

நேட்டோ படைகளை முகாமில் அடைக்க வேண்டும் அதிபர் ஹமீதுஹர்சாய்


கடந்த வாரம் அமெரிக்க படைத்துறை சார்ஜன்ட் தர அ திகாரி ஒருவர் சிறு பிள்ளைகள், பெண்கள், ஆண்களெ ன 16 அப்பாவி ஆப்கானிஸ்தானிரை சுட்டுப் பொசுக்கி யது பழைய கதையாகிவிட்டது. இப்போது வீறு கொண் ட ஆப்கான் அதிபர் ஹர்மீட் ஹர்சாய் நேட்டோ படைக ள் இனி முகாமிலேயே இருக்க வேண்டும் என்று அறுதி யாக தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியை ஏற்படுத் துவதாகக் கூறிக்கொண்டு கிராமங்கள் நகரங்கள் தோ றும் நடமாடும் படையினரை அங்கிருந்து
விலத்தி மு காம்களுக்குள் வைக்கும்படி அமெரிக்க படைத்துறை அமைச்சர் லியோன் பனீ ற்றாவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.ஆனால் அமெரிக்க படைத்துறையின் கொலை சந்தேக நபர் ஏன் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார் என்பதற்கான விளக்கத்தை அவருடைய சட்டத்தரணி ஜோன் ஹர்ரி பிரவுண் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் நடைபெற்ற கண்ணி வெடித்தாக்குதலில் அமெரிக்கப்படை வீரர் ஒருவருடைய கால் பறந்திருக்கிறது. மேற்கண்ட படைவீரர் கொலையாளியின் நண்பராவார். நண்பருடைய குடும்பத்தினர் அங்கு வந்து கதறி அழுத காட்சியால் முகாமே சூடேறிக்கிடந்தது. இதன் காரணமாக தூண்டுதலடைந்த சார்ஜன்ட், ( ரம்போ திரைப்பட பாணியில் ) பொது மக்களை கொன்று தள்ளினார் என்றும் தெரிவித்தார். ஆக ஒரு மனோநிலை பாதிக்கப்பட்ட சிப்பாயின் செயல் என்பது அவருடைய வாதமாக இருந்தது. மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள அவரைக் காப்பாற்ற பைத்தியம் என்று பட்டம் சூட்டுவதே மிகவும் வாய்ப்பான வாதாட்டமாகும். நோர்வேயில் 76 பேரை கொன்ற பயங்கரவாதி ஆனாஸ் பிகார்ஸ் பிறீவிக் பைத்தியம் என்ற தலைப்பில் தப்பிக்க வழி பிறந்துள்ளமை கவனிக்கத்தக்கது. இப்படியான பைத்தியங்கள் தண்டனையில் இருந்து தப்பியதும் இயல்பு மனிதராக மாறுவதும் கவனிக்கத்தக்கதாகும்.

0 கருத்துகள்: