தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.2.12

நைஜீரியா: ஜெயிலரை சுட்டுக் கொன்று 119 கைதிகளை விடுவித்த போராட்டக்காரர்கள்.

நைஜிரியா நாட்டில், அரசுக்கு எதிராக ஒரு குழுவினர் ஆயுதம் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . ஆயுதப்புரட்சியால் நாடு அமைதி இழந்து, பீதியும், பதட் டமும் நிலவுகிறது. அரசுப்படையினருக்கும், புரட்சிக்கா ரர்களுக்கும் இடையே ஆங்காங்கே பயங்கர சண்டை ந டக்கிறது.போராட்டக்காரர்கள் நேற்று லாகோஸ் நகரி ல் உள்ள பெடரல் ஜெயிலை தாக்கினர். ஜெயிலின் நு ழைவு வாயிலை, சக்தி வாய்ந்த வெடி குண்டு பொருத்தி தகர்த்தனர். தடுக்க வந்த
ஜெயிலரை துப்பாக்கியால் சுட் டுக்கொன்றனர்.
பின்னர் ஜெயில் வளாகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அறைகளை உடைத்து, அங்கு அடைக்கப்பட்டிருந்த 119 கைதிகளை விடுவித்தனர். போராட்டக்காரர்களின் கை ஓங்கியுள்ளதால், நாட்டின் ஸ்திரத்தன்மை கேள்விக் குறியாகி உள்ளது.

0 கருத்துகள்: