தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.1.12

பஞ்சாபில் குண்டுதுளைக்காத வாகனத்தில் இருந்து ரூ.2 கோடி பறிமுதல்

லூதியானா, ஜன. 20-  பஞ்சாப் மாநிலத்தில் இந்த மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அங்கு சாலையில் செல்லும் வாகனங்க ளில் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் மதுபான ங்கள் ஏதேனும் கடத்தப்படுகிறதா? என்ற சோதனையி ல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், நே ற்று இங்கு பதேகர் சாகிப் மாவட்டத்தில் ஒரு சாலையில் போலீசார் வாகனங்களை
சோதனை செய்துகொண்டு இருந்தனர். அப்போது, அங்கு குண்டுதுளைக்காத ஒரு வாகனத்தை சோதனையிட்டனர். அதில் கணக்கில் காட்டப்படாமல் இருந்த ரூ.2 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, போலீசார் ரூ.2 கோடி பணத்தையும், அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்: