தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.10.11

ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஜாமீன்!


குஜராத் காவல்துறையால் கைது செய்யப் பட்டுள்ள ஐ.பி.எஸ்.அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு அகமதா பாத் செசன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி காவல்துறை உயரதிகாரிகளில் கூட்டத்தில் கூறியதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்து இருந்தார் குஜராத் அரசின் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்.

நரேந்திர மோடி மீது குற்றச் சாட்டு கூறிய நிலையில் இடைநீக்கம் செய்யப் பட்டு இருந்த சஞ்சீவ் பட் சக காவலர் கே.டி.பாந்த் என்பவரை மிரட்டி நரேந்திர மோடி மீது புகார் கூற முயற்சி செய்ததாக கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டு இருந்தார்.

0 கருத்துகள்: