தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.10.11

இந்திய பயங்கரவாதத்தின் நிறம் காவி

நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் முதல் பணியாகஉளவுத் துறையின் அவதூறுகளை பதினைந்து நிமிடங்கள்கேட்டுவிட்டுதன்னுடைய அன்றாடப் பணிகளைத்தொடங்குகிறார் இந்தியப் பிரதமர்இந்நாட்டு ஊடகங்கள்உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பொதுப்புத்தியைஎவ்வாறு அரசின் விருப்பத்திற்கேற்ப தகவமைக்கின்றனஎன அடுக்கடுக்காய் நாம் இதுவரை கேட்டிராதசெய்திகளைஇந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிவுசெய்திருக்கிறார்எஸ்.எம்முஷ்ரிப்மாலெகவ்னில்உள்ள பிகு சதுக்கத்தில் 29 செப்டம்பர் 2008 அன்றுஒருகுண்டு வெடிப்பு நிகழ்ந்ததுஇதில் ஆறு பேர்கொல்லப்பட்டனர்நூறு பேர் 
காயங்களுடன் உயிர்தப்பினர்.

இது ‘சிமி‘ என்ற முஸ்லிம் இயக்கத்தின் சதி எனஅரசு உடனே அறிக்கை ஒன்றை வெளியிட்டதுஇதனைபத்திரிகைகளில் படித்துவிட்டுஇதுதான் உண்மை எனமக்கள் நம்பினர்ஆனால்இது போன்ற நேரங்களில்அதற்கு மேல் சிந்திக்காமல்நாம் அனைவரும் அன்றாடவாழ்க்கைக்கு திரும்பி விடுகிறோம்சிலர் மட்டுமே இதுசார்ந்த செய்திகளை முனைப்புடன் படிக்கிறோம்அத்துடன்நம் அரசியல் முனைப்பு அணைந்து விடுகிறது.
ஆனால்இதுபோன்ற சம்பவங்களுக்குப் பிறகு இந்தகுண்டு வெடிப்பு நிகழ்ந்த நகரங்களில் ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறதுமுதலில் அரசு எந்த விசாரணையும்இன்றியே முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளின் பெயர்களை வெளியிடுகிறதுஅது பெரும்பாலும்லஷ்கர்--தொய்பாஹுஜிசிமி என நீளும்அதன் பிறகு குண்டு வெடிப்பு நிகழ்ந்த நகரத்தில் வசிக்கும் பலமுஸ்லிம் இளைஞர்களையும் கைது செய்துவிசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகள் சிறையில்அடைக்கும்இப்படிப்பட்ட துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்காகவேபல்வேறு சட்டங்கள் இந்நாட்டில்இயற்றப்பட்டுள்ளன.
மாலெகவ்னில் சில வழக்கங்கள் முதன் முறையாக மீறப்பட்டனகுண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஒருமோட்டார் சைக்கிள் கிடந்ததுஅது MH 15 – 4572 எண்ணுடைய LML Freedom வண்டிஇந்த இரு சக்கரவாகனத்தை வைத்து விசாரணையை தொடங்கினார்மகாராட்டிர தீவிரவாத ஒழிப்புப் படையின் தலைவர்ஹெமந்த் கர்கரேவண்டியின் எண்ணும்சேசிஸ் எண்ணும் மாற்றப்பட்டிருந்ததுவிசாரணை அத்தனைஎளிதாக இல்லைஇருப்பினும்அந்த ஊரில் உள்ள வண்டியின் விநியோகஸ்தரிடம் இருந்த ஆவணங்களைவைத்துவண்டியின் உரிமையாளரை விசாரணைக் குழு கண்டுபிடித்ததுஅதுசாத்வி பிரக்நயா தாக்குரின் (38)வண்டி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால் இவர் இந்த வழக்கில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகஅந்த இரு சக்கர வாகனத்தை மனோஜ் சர்மாஎன்பவருக்கு விற்றதுபோல் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தனமனோஜ் சர்மாஆர்.எஸ்.எஸ்.அய்சேர்ந்தவர்மத்தியப் பிரதேசத்தின் மோஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரைக் கொன்ற வழக்கில் இவர்தான்முக்கியக் குற்றவாளிஇதனை அடுத்து சாத்வி பிரக்ந்யா தாக்குரை தீவிர விசாரணைக்கு உட்படுத்திய போதுபல உண்மைகள் வெளிவந்தனபல பா...- ஆர்.எஸ்.எஸ்தலைவர்கள் இவர்களுடன் தொடர்பில்இருப்பதும் தெரியவந்ததுபத்து ஆண்டுகளுக்கு முன்பு சாத்வி பிரக்நயா தாக்குர்பா...வின் மாணவர்அமைப்பான .பி.வி.பி.யின் முக்கியத் தலைவிஅதன் பிறகு அவர் வி.எச்.பி.யின் மகளிர் அமைப்பான ‘துர்காவாகினியின் முன்னணித் தலைவியாக இருந்தார்மேலும் விசாரணை பல தளங்களில் தொடர்ந்தது.
முன்னாள் ராணுவ வீரர்களின் ஆர்.எஸ்.எஸ்பிரிவு தலைவர் ரமேஷ் உபாத்யாயாவுக்கு இருந்த தொடர்புவெளிப்பட்டதுஅவர்தான் இந்த குண்டு வெடிப்புக்கான ஆர்.டி.எக்ஸ்வெடி மருந்தை கொடுத்தவர்சமீர்குல்கர்னி என்பவர்தான் இந்த குண்டிற்கான அடிப்படை ரசாயனங்களை கொடுத்திருந்தார்நாசிக்கில் உள்ளபோன்சலா மிலிடரி பள்ளியின் முக்கியப் பொறுப்பாளரான முன்னாள் ராணுவ மேஜர் பிரபாகர்குல்கர்னிதான்ஆர்.டி.எக்ஸ்.அய் பயன்படுத்தும் முறைகள் குறித்த பயிற்சியை அளித்திருந்தார்முன்னாள்ராணுவத் தளபதி ஷெலெஸ் ரைக்கர்தான் இந்த குண்டு வெடிப்பிற்கான மொத்த நிதி உதவியையும்செய்திருந்தார்அடுத்துதான் முக்கியத் திருப்பம் நிகழ்ந்ததுஇதனை ஹெமந்த் கர்கரேயின் முக்கிய வேட்டைஎனலாம்.இந்திய ராணுவத்தைச் சேர்ந்த தளபதி பிரசாத் புரோகித் நவம்பர் 4, 2008 அன்று கைது செய்யப்பட்டார்.அவர் ஆர்.எஸ்.எஸ்அமைப்பின் முக்கிய ஆதரவாளர்செயல்பாட்டாளர்அவர்தான் இந்த மாலெகான் குண்டுவெடிப்பு திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர்இதனை அவர் விசாரணையில் ஒப்புக்கொண்டார்மேலும்,அவர் பல முகாம்களில் ஆர்.எஸ்.எஸ்மற்றும் அதன் பல்வேறு துணை அமைப்புகளின் முக்கியத்தொண்டர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பு சார்ந்த பயிற்சிகளை கொடுத்து வந்ததையும் விரிவாகவே ஒப்புக்கொண்டார்அவருடைய மடி கணினியில்இது தொடர்புடைய அத்தனைத் தகவல்களும் இருந்தனபயிற்சிஎடுத்துக் கொண்ட 58 பேரின் பட்டியல் என இது தொடர்பான விசாரணைக்குப் பல புதிய பரிமாணங்களை அதுஅளித்தது.
தளபதி பிரசாத் புரோகித்துக்கும் ரமேஷ் உபாத்யாயாவுக்கும் இடையே நடைபெற்ற கைபேசி உரையாடல்கள்,குறுஞ்செய்திப் பரிமாற்றங்கள் எனப் பல புதிய சாட்சியங்கள் கிடைத்த வண்ணம் இருந்தனஅடுத்து ‘அபினவ்பாரத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுதாகர் சதுர்வேதியிடம் பல துப்பாக்கிகளும்பல போலியான இந்தியராணுவத்தினரின் அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டனஇந்த விசாரணையை நடத்தி முடிக்கவேண்டும் என்பதில் மிகவும் கறாராக இருந்தவர் ஹெமந்த் கர்கரேபல அழுத்தங்கள் அவர் மீது வந்தபொழுதிலும் அசராமல் தன் மனசாட்சிப்படி உண்மையை அதன் அசல் நிறத்தில் காண வேண்டும் என்கிறஅவரது திண்மம் அசைக்க முடியாததாக இருந்தது.
நரேந்திர மோடி முதல் பல ஆர்.எஸ்.எஸ்தலைவர்கள் வரை தினமும் ஹெமந்த் கர்கரேயை வசைபொழிந்தார்கள்தேச துரோகி என்றார்கள்ஆனால்அவரோ சிரித்த முகத்துடன் விசாரணையை நடத்திச்சென்றார்இந்த சூழலில் ஹெமந்த் கர்கரேமும்பை தாக்குதல்கள் நடைபெற்ற அன்று இரவு சி.எஸ்.டி. – காமா– ரங்க்பவன் தெருவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்அவருடன் இரண்டு முக்கிய காவல் துறைஅதிகாரிகளும் கொல்லப்பட்டனர்இந்த மூவரையும் தீவிரவாதிகள்தான் கொன்றனர் என இந்த நாடே நம்பவைக்கப்பட்டதுஇது குறித்து பலரும் அந்த நேரமே தங்கள் அய்யங்களைப் பதிவுசெய்தனர்.இந்நிலையில்தான் ஹெமந்த் கர்கரே கொல்லப்பட்டார் என்பதை ஆதாரங்களுடன் நிறுவும்பணியில் களம் கண்டிருக்கிறார் மகாராட்டிரத்தின் முன்னாள் காவல் துறை அய்.ஜி.யான எஸ்.எம்முஷ்ரிப்.நாட்டையே உலுக்கிய தேல்ஜி பத்திர ஊழலைஇந்த நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அவர்.முஷ்ரிப் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள முக்கியமான ஆங்கில நூல்தான் ‘கர்கரேயை கொன்றது யார்?’ (Who killed Karkare?). நாட்டையே உலுக்குகிற ஒரு முக்கிய விஷயத்தில் அதன் மொத்தப் புரிதலையும் மாற்றிஅமைக்கிற ஆற்றல்இந்நூலுக்கு இருக்கிறது என்றால் மிகையல்ல.
அடிப்படையில் முஷ்ரிப் ஒரு எழுத்தாளர் அல்லகாலமெல்லாம் அவர் ஓர் அரசு நிர்வாகியாகவேபணியாற்றியவர்சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்துணிச்சலுடன் இத்தகைய பெரும் நூலைஆவணமாக்கியிருப்பது நமக்கு பெரும் வியப்பை அளிக்கிறதுநூல் நெடுகிலும் ஆசிரியர் மனதில்இழையோடும் ஒருவித பதற்றத்தையும்அச்சத்தையும் உணரமுடிகிறதுஇந்திய அதிகார வர்க்கம் மற்றும்உளவுத் துறைக்கு இருக்கும் மட்டற்ற அதிகாரம்அவரை அச்சுறுத்துகிறதுஅதனாலேயே பல இடங்களில்இந்நூலின் ஆவணங்களை தொகுக்கும்போதுசில பார்வைகளை அழுத்தமாக முன் வைக்க வேண்டியஇடங்களில் எல்லாம் ஆசிரியர் மவுனமாகவே இருக்கிறார்இந்நூலுக்குள் இருக்கும் ஆவணங்களைஅடிப்படையாக வைத்துமேலும் பல ஆய்வுகளை செய்யவும்பல நூல்களை எழுதவும் இடம் இருக்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் பத்து ஆண்டுகளில்இந்தியாவின் உளவுத்துறையை பார்ப்பனர்கள்கைப்பற்றி விட்டனர்இன்றுவரை பார்ப்பனர்களும்ஆர்.எஸ்.எஸ்அமைப்பும் எந்தெந்த வழிகளில் எல்லாம்இந்த நாட்டில் பிரிவினையை விதைத்துசிறுபான்மையினரை அடிமைகளாக மாற்றிஇங்கு ஓர் இந்துராஷ்டிரத்தை நிறுவ முயன்று வருகின்றனர் என்பதை நூலாசிரியர் மிகுந்த ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.
2006 இல் மும்பை – நாந்டேட் குண்டு வெடிப்புகள், 2007இல் உத்திரப்பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில்தொடர்குண்டு வெடிப்புகள், 2008 இல் மாலெகவ்னில் என இந்தியாவின் பல பகுதிகளில் வெடிக்கும் குண்டுகள்எல்லாம் – ஆர்.எஸ்.எஸ்அமைப்பு திட்டமிட்டு வைத்து விட்டுபழியை முஸ்லிம் அமைப்புகள் மீது சுமத்திவிடுகிறது என்பதை ஆதாரங்களுடன் பத்திரிகை செய்திகள் ஊடாகவிவரணைகளுடன் அசாத்தியமாகநிறுவுகிறார் முஷ்ரிப்.
இந்தியாவில் உளவுத்துறையும்ஊடகங்களும் பார்ப்பனர்களால் வழி நடத்தப்படுகின்றன என்கிறார் முஷ்ரிப்.அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட பலஆய்வுகளில்அந்த தாக்குதல்களை அமெரிக்க அரசின் உளவுத் துறையான சி.அய்.செய்ததது என்பதுநிரூபிக்கப்பட்டுள்ளதுபல நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்கவும்எண்ணெய் வளத்தை அபகரிக்கவும்,அமெரிக்காவிற்கு ஒரு தொடக்கப்புள்ளி தேவையாக இருந்ததுஅதற்காகத்தான் அமெரிக்கா இந்தத்தாக்குதல்களை செய்தது என ராணுவ ஆய்வாளர்கள் பலரும் ஆதாரங்களுடன் தெரிவித்துவருகின்றனர்.அதைப் போலவே மும்பை தாக்குதலைப் பற்றி பல அய்யங்களை முஷ்ரிப் இந்த நூலில்எழுப்புகிறார்அவருடைய சந்தேகங்கள் மிக முக்கியமானவைதீவிர ஆய்வுகளை கோருபவைசி.எஸ்.டி.ரயில் நிலையத்தில் இருந்த 16 சி.சி.டி.விகாமிராக்கள் எப்படி ஒரே நேரத்தில் செயலிழந்தனகிடைத்த சிலபதிவுகளைக் கூட அழித்தவர்கள் யார்தாக்குதல் தொடுத்தவர்கள் எப்படி சரளமாக மராத்திய மொழியில்பேசினார்கள் என அடுக்கடுக்காய் சந்தேகங்கள் எழும்பிய வண்ணம் உள்ளன.
இந்த தாக்குதல்கள் கர்கரேயை கொல்வதற்காகவே திட்டமிடப்பட்டனவாஎன்று கூடநமக்கு இந்நூலைவாசிக்கையில் சந்தேகம் எழுகிறதுஆர்.எஸ்.எஸ்இன் 45 ஆயிரம் கிளைகள் மற்றும் 44 ஆயிரம்ஷாகாக்களில் நடக்கும் வன்முறைப் பயிற்சிகளை எல்லாம் கணக்கில் கொண்டால்இம்மண்ணில்தீவிரவாதத்தை வளர்க்கும் இந்து அமைப்புகளின் மீது தீவிர கண்காணிப்பை செலுத்த வேண்டும்ஆனால்உளவுத்துறையே அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறதுபல மாநிலங்களில் காவல் துறைசமூகநலத்துறை எனப் பல முக்கிய அரசுத்துறைகளில் ஆர்.எஸ்.எஸ்தொண்டர்கள் ஊடுருவி வரும் செய்திகடந்த15 ஆண்டுகளாக நம் காதில் வந்து விழுந்த வண்ணம் உள்ளன.இந்நூலை வாசித்துக் கொண்டிருந்தவேளையில் ஒரு செய்திஇந்த புத்தகம் கோருகிற புரிதலுடன் நிகழ்ந்ததுபிப்ரவரி 24, 2010 அன்று சூரத்நகரத்தின் மாநில காவல் துறை தீவிரவாத தாக்குதல் நடந்தால்நம் படைகள் அதனை எதிர்கொள்ள இயலுமாஎன ஒத்திகை நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்ததுபொதுவாக ஒத்திகை நிகழ்வு என்றால்ஆயுதங்கள்பயன்படுத்தப்பட்டாலும் அதில் எந்த வித வெடிபொருளையும் நிரப்ப மாட்டார்கள்ஆனால் அன்று நிகழ்ந்தஅந்த ஒத்திகையின் போதுசூரத் நகர உதவி காவல் துறை ஆணையர் சுபாஷ் சதுர்வேதி என்பவர்அந்தஒத்திகையில் பங்கு பெற்ற தீவிரவாத ஒழிப்புப் படையின் ஆய்வாளர் சாபிரிலி சையத் என்பவரைஇரண்டுமுறை தனது துப்பாக்கியால் சுட்டார்பெரிய ஊடகப் பதிவுகள் கூட இல்லாமல்அது ஒரு விபத்து எனபிரச்சனை முடிக்கப்பட்டுவிட்டதுஇந்த துப்பாக்கிச் சூடு பல முக்கிய கேள்விகளை எழுப்புகிறது.
டிசம்பர் 2008 கோத்ரா இனப்படுகொலையில்இந்து அமைப்புகளும் மோடியின் மாநில அரசும்எவ்வாரெல்லாம் செயல்பட்டார்கள் என்பதை ‘தெகல்கா‘ புலனாய்வுப் பதிவுகள் அம்பலப்படுத்தினஅதனைத்தொடர்ந்து மாலெகான் புலனாய்வின்போதுகர்கரே மீண்டும் புதிய கோணங்களில் சங்பரிவாரைதோலுரித்துக் காட்டினார்நாந்டேட்மாலெகான், ‘தெகல்கா‘ என இந்த செய்திகள்ஊடகங்களில் தொடர்ந்துபுழங்கிய காலகட்டத்தில்தான் ‘இந்து தீவிரவாதம்‘ என்ற சொல்லாடலின் பயன்பாடு தொடங்கியதுஆங்கிலஅச்சு ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்கள்இச்சொல்லாடலை அழுத்தமாகப் பயன்படுத்தத் தொடங்கின.இந்த வார்த்தைப் பயன்பாடுதான்-இந்து சங்பரிவாரை கொதிநிலைக்கு இட்டுச் சென்றதுபலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுத்தானே தீருவான்இந்த நிலையில் அவர்களது முதல் இலக்கு மாலெகான் விசாரணையைதடுத்து நிறுத்துவதாக இருந்ததுஅதற்காகஎல்லாவித செயல்பாடுகளிலும் அவர்கள் களமிறங்கத்துணிந்தனர்.நூலை வாசிக்கையில் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் பொய்க் குற்றம் சாட்டப்பட்டுபின்னர்விடுவிக்கப்பட்ட தில்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் கிலானியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.அவர் ஒரு முறை தனது கட்டுரை ஒன்றில் இப்படி எழுதினார்: ‘‘நான் உளவுத்துறையைஅதன்நடவடிக்கைகளை மிக நெருங்கி இருந்தே பார்த்திருக்கிறேன்அவர்களுடன் அமர்ந்து உரையாடும் பொழுது,நான் ஓர் அரசு அலுவலகத்தில் இருக்கும் உணர்வே எனக்கு ஏற்பட்டதில்லைமாறாகஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் இருப்பதைப் போலவே உணர்ந்திருக்கிறேன்.”

0 கருத்துகள்: