தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.10.11

அரபு நாட்டில் ஆள்கடத்தல், கற்பழிப்பில் ஈடுபட்ட 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை

துபாய், அக். 13-  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஆள் கடத்தல், கற்பழிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு 2009-ம் ஆண்டு தொடங்கியது.
12 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என மொத்தம் 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. 2 இந்தியர்களை கடத்தியதாகவும், அவர்களை கத்தியால்
குத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. கற்பழித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கீழ்க்கோர்ட்டு ஒரு இந்தியருக்கு மரணதண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து துபாய் அப்பீல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த அப்பீல் கோர்ட்டு கீழ்க்கோர்ட்டு தீர்ப்புக்கு மாறாக 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்தது. மற்ற 2 இந்தியர்களுக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்ற 13 பேரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

0 கருத்துகள்: