தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.10.11

ஜெயலலிதாவிடம் 2வது நாள் விசாரணை முடிந்தது: நவம்பர் 8ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

ஜெயலலிதாவிடம் 2வது நாள் விசாரணை முடிந்தது: நவம்பர் 8ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு,ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று இவர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து பரப்பன அக்ரஹாரம் சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நேற்று முதல்நாள் நீதிபதி மல்லிகார்ஜபுனையா முன்னிலையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

மாலை 5.15 மணி வரை விசாரணை

நடைபெற்றது. அதன் பின்னர் விசாரணையை நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நீதிபதி மல்லிகார்ஜபுனையா தள்ளி வைத்தார்.

இதை தொடர்ந்து ஜெயலலிதா தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். நேற்று காலை மீண்டும் பெங்களூர் வந்து இரண்டாவது நாளாக ஆஜரானார் ஜெயலலிதாவிடம் நீதிபதி மல்லிகார்ஜூனையா 187 கேள்விகள் கேட்டுள்ளார்.

கடந்த இரு நாட்களாக ஜெயலலிதா மொத்தம் 567 கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவிடம் கேட்பதற்கு 1,339 கேள்விகள் தயார் செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய 772 கேள்விகளுக்கு பதிலளிக்க, அவரை நவம்பர் 8-ல் ஆஜராகும்படி நீதிபதி மல்லிகார்ஜுனையா உத்தரவிட்டார்.

நவம்பர் 8-ல் ஜெயலலிதா ஆஜராகவில்லை என்றால், அவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

0 கருத்துகள்: