தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.9.11

இஸ்ரேல் தூதரகத்தில் ரகளை: கெய்ரோ கலவரத்தில் 3 பேர் பலி; 1000 பேர் காயம் ;அவசரநிலை பிரகடனம்


கெய்ரோ நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் பலியாகினர். 1000 பேர் காயம் அடைந்தனர்.  
 எகிப்து நாட்டின் தலை நகரான கெய்ரோவில் இஸ்ரேல் தூதரக அலுவலகம் உள்ளது. முபாரக் அதிபராக இருந்தவரை இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இருநாடுகளின் நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே கடந்த மாதம் எகிப்து ஆயுத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் எகிப்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இது எகிப்து மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.   நேற்று முன்தினம் பிரார்த்தனை முடிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் கெய்ரோவில் உள்ள தகிரீர் மைதானத்தில் திரண்டனர்.
அரசியல் சீர்திருத்தம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் தூதரகத்துக்கு சென்றனர். அங்கு புகுந்து தாக்குதல் நடத்தினர். தூதரக அலுவலகத்தின் கட்டிடத்தை இடித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் போலீசாரை தாக்கினர். தூதரக அலுவலகத்துக்கும் தீ வைத்தனர்.
 கலவரத்தை கட்டுப்படுத்த முடியாததால் நூற்றுக் கணக்கான அதிரடி கமாண்டோ ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் 6 இஸ்ரேலிய பாதுகாவலர்களையும், தூதரக அலுவலர்களையும் மீட்டனர். அதைத் தொடர்ந்து தூதர் யிட்சாக்லெவனோனின் தனது குடும்பத்தினர் மற்றும் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் விமானம் மூலம் இஸ்ரேல் திரும்பினார்.  
நேற்று நடந்த கலவரத்தில் 3 பேர் உயிரிழந்தனர்¢. 1,049 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 300 பேர் போலீஸ் காரர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பாக இதுவரை 19 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு வரை கல வரம் தொடர்ந்து நடந்தது.  
இதனால் கெய்ரோ நகரில் அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. பாது காப்பு பணிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: