தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.6.11

இலங்கைக்கு மலேசியா ஆதரவளிக்க கூடாது - மலேசிய மனித உரிமை அமைப்பு


இலங்கைக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை மலேசியா மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என மலேசிய மனித உரிமைகளை மேம்படுத்தும் அமைப்பான Persatuan Promosi Hak Asasi Manusia (Proham) கோரிக்கை விடுத்துள்ளது.
2009ம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் குற்றச்சாடுக்கள் சுமத்தப்பட்ட போது, அது அந்நாட்டில் உள்ளூர் பிரச்சினை என மலேசியாவும் ஒதுங்கிக்கொண்டது.
எனினும் தற்போது இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு வருவதால் மலேசியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை எனவும், அந்த அமைப்பின் தலைவர் Simon Sipaun கோரியுள்ளார்.

தெ.ஆபிரிக்காவில் மனித உரிமைகள் மீறப்பட்ட போது அதற்கு எதிராக மலேசியா குரல் கொடுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துகள்: