தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.6.11

ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது: ரஜினிகாந்த்

சென்னை, ஜூன். 16-  மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டதற்கு வாழ்த்துக்கள் என ஜெயலலிதாவிடம் போனில் தெரிவித்தார் ரஜினிகாந்த்.

கடந்த ஏப்ரல் 29-ம் தேதி ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னை இசபெல்லா மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற ரஜினி, சிறுநீரக பிரச்னைக்காக கடந்த மே 18-ம் தேதி சிங்கப்பூர் சென்றார்.
அங்குதான் அவரது நோய்க்கான மூல காரணம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை வேகமாக சீரடைந்தது. இப்போது ரஜினி பூரண நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்ததும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு போன் செய்தார் ரஜினி. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் சிங்கப்பூரிலிருந்து நேற்று தொலைபேசியில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் முதலில் பேச முடிவு செய்ததது முதல்வருடன்தான் என்று கூறிய ரஜினி தான் பூரண உடல்நலம் பெற்றுவிட்டதாக தெரிவித்தார். ரஜினிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் தொலைபேசியில் ரஜினியின் குரலைக் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் முதல்வர் கூறினார்.
சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டதற்காக ஜெயலலிதாவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், தான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அக்கறையுடன் விசாரித்ததற்கு நன்றிகளையும் கூறினார் ரஜினி. விரைவில் ரஜினி சென்னை திரும்ப வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அவரை வாழ்த்தியபோது, இன்னும் ஒன்றரை மாதத்தில் சென்னை திரும்புவதாக ரஜினி கூறினார்.
ரஜினியின் மனைவி லதா ரஜினியும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: