தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.3.11

ஜப்பான்:மீண்டும் பூகம்பம், புகுஷிமாவில் வெடிக்கத் தயாராகும் 4வது அணுஉலை

டோக்கியா,மார்ச்.15:ஜப்பானில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 6.3 ரிக்டர் ஸ்கேல் அளவில் பதிவாகியுள்ளது.

பூகம்பத்தைத் தொடர்ந்து வடகிழக்கு கடற்பகுதியில் 3 மீட்டர் உயரத்தில் அலைகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே புகுஷிமாவில் மீண்டும் மற்றொரு அணுஉலை வெடிப்பு ஏற்படப் போகிறது. ஏற்கனவே மூன்றாவது அணுஉலையின் மேல் பகுதியில் ஹைட்ரஜன் வாயு அடைந்து மூடியதால் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மூன்றாவது அணு உலையிலிருந்தும் புகை வெளிவரத் துவங்கியுள்ளது

சுனாமியினால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவும், தண்ணீரும் இல்லாமல் துயரத்தை அனுபவிக்கின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: