தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.7.12

என்னை அம்மா என்று அழையுங்கள்: எகிப்து ஜனாதிபதியின் மனைவி


நாட்டின் முதல் பெண்மணி என்று தன்னை அழைக்க வேண்டாம் என எகிப்து ஜனாதிபதியின் மனைவி கேட்டுக் கொண்டுள்ளார்.எகிப்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவரான முகமது முர்ஸி வெற்றி பெற்று, புதிய ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார்.முன்னாள் ஜனாதிபதி முபாரக்கின் மனைவி சுசானே, நவீன பாணியில் தான் உடை அணிவார். ஆனால் தற்போதைய ஜனாதிபதியின் மனைவி நக்லா
வெளியிடங்களுக்கு பர்தா அணிந்து தான் செல்கிறார்.சமீபத்தில் இவர் அளித்த பேட்டியின் போது குறிப்பிடுகையில், ஜனாதிபதியின் மனைவியை நாட்டின் முதல் பெண்மணி என அழைப்பதில், எந்த நியாயமும் இல்லை.
ஜனாதிபதி மனைவி என அழைக்கலாம் அல்லது நாட்டின் முதல் பணிப்பெண் என அழைக்கலாம்.
மரியாதையாக தான் அழைக்க வேண்டும் என்றால் அம்மா என்றழைக்கலாம். எனவே என்னை நாட்டின் முதல் பெண் என்றழைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: