தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.4.12

அமெரிக்காவில் இந்திய இளைஞர் மீது இனவெறி தாக்குதல்

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒரு வர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன வெறி தாக்குதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா க கூறப்படுகிறது.பஞ்சாப் மாநிலம் ஜலாந்தர் மாவட்ட த்தைச் சேர்ந்தவர் ராகுல் ஷர்மா(வயது 20). இவரது உ றவினர்கள் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாண த்தில் உள்ளனர்.ராகுல் ஷர்மா, தனது தந்தை பாரன்ஷ ர்மா, தாய் தேவேந்தர் ஷர்மா
இரு சகோதரிகள் ஆகியோருடன் கடந்த 7 ஆண் டுகளுக்கு முன் அமெரிக்காவின் பிரிமவுண்ட் நகரில் குடியேறினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சொந்த விஷயமாக தனது வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றார். பிரி‌மவுண்ட் சென்டர்வெலி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டு பிணமாக கி‌டந்துள்ளார்.
இது தொடர்பாக பிரிமவுண்ட் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இனவெறியால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராகுல் ஷர்மா சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவில் உள்ள பஞ்சாப் வாழ் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: