தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.4.12

துபாயில் நடந்த உல‌க‌ அமைதிக்கான‌ மாபெரும் பேர‌ணி

துபாய் :துபாய் ச‌ர்வ‌தேச‌ அமைதிக் க‌ருத்த‌ர‌ங்குஅமை ப்பு உல‌க‌ அமைதிக்கான‌ மாபெரும் பேர‌ணியினை 06 .04.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை 4 ம‌ணிக்கு துபாய் உல‌க‌ வ‌ர்த்த‌க‌ மைய‌த்தில் தொட‌ங்கி சுமார் 2.5கிலோ மீட்ட‌ர் தூர‌ம் வ‌ரை ந‌டைபெற்ற‌து. இக்க‌ருத்த‌ர‌ங்கு அ மீர‌க‌ துணை அதிப‌ர், பிர‌த‌ம‌ அமைச்ச‌ர் ம‌ற்றும் துபாய் ஆட்சியாள‌ர் மேன்மைமிகு ஷேக் முஹ‌ம்ம‌து பின் ரா ஷித் அல் ம‌க்தூம் ஆத‌ர‌வுட‌ன் ந‌டைபெறுகிற‌து.ஷேக் ம‌ன்சூர் பின் முஹ‌ம்ம‌து பின் ராஷித் அல் ம‌க்தூம் த‌ லைமையில் அமைதிப் பேர‌ணி
ந‌டைபெற்ற‌து.இந்த‌ பேர‌ணியையொட்டி பாராசூட் வீர‌ர்க‌ள்,நூற்றுக்க‌ண‌க்கான‌ மோட்டார் பைக்கு கள், உய‌ர்த‌ர‌ சொகுசு கார்க‌ள் உள்ளிட்ட‌வையும், ஆயிர‌க்க‌ண‌க்கான ம‌க்க‌ளும், ப‌ள்ளி மாண‌வ‌, மாண‌விய‌ரும் ஆர்வ‌முட‌ன் ப‌ங்கேற்று அமைதியை வ‌லியுறுத்தி கோஷ‌மிட்ட‌ன‌ர்.

உட‌ல் ஊன‌முற்றோரும் த‌ங்க‌ள‌து வீல் சேரில் ப‌ங்கேற்று அமைதி முழ‌க்க‌மிட்ட‌து அனைவ‌ரையும் க‌வ‌ர்ந்த‌து. இப்பேரணியில் இன,மத, மொழி பேதமின்றி அனைத்து நாட்டு மக்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.காவ‌ல்துறையின‌ர் பேர‌ணியில் ப‌ங்கேற்ற‌ ம‌க்க‌ளை பூச்செண்டு கொடுத்து வ‌ர‌வேற்ற‌ன‌ர்.

0 கருத்துகள்: