அதற்காக அவரிடம் லஞ்சம் கொடுத்தனர். அதை லஷ்மண் வாங்கினார். இதை அனைத்தையும் கமெரா மூலம் ரகசியமாக பதிவு செய்த டெஹல்கா குழு, 2001 மார்ச் 13ம் திகதி அதை வெளியிட்டு, நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பாஜக தலைவர் பதவியை பங்காரு லஷ்மண் ராஜினாமா செய்தார்.
பின்பு லஷ்மண் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 11 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கன்வால் ஜித் அரோரா பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த வழக்கில் ஏராளமான ஆவணங்களும், வாதங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை எல்லாம் ஆராய்ந்து தீர்ப்பு அளிக்க 15 நாட்கள் போதாது. எனவே, ஏப்ரல் 27ம் திகதி தீர்ப்பு அளிக்கப்படும்’’ என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக