தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.3.12

கின்னஸ் சாதனைக்காக உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!


புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கும் முற்பட்டஇலங்கையை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் சாதனை அம்முயற்சி தோல்வியுற்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் இலங்கை கந்தளாய் வான் எல்ல பகுதியில் நேற்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சாதனைக்கான
திட்ட த்தின்படி, தான் வெட்டி வைத்திருந்த குழியில் தன்னை உயிருடன் புதைக்குமாறு குடும்ப அங்கத்தவர்களிடம் அவர் நேற்றுகாலை கூறினார். தான் புதைக்கப்பட்ட போலி கல்லறைக்கு மேல் தீமூட்டிவிட்டு மாலை 4.00 மணியளவில் கல்லறையை திறக்குமாறு குடும்பத்தினருக்கு அவர் அறிவுறுத்தியிருந்தார்.






ஆனால் அப்போலியான கல்லறையை குடும்பத்தினர் திறந்துபார்த்தபோது அவ்விளைஞர் உணர்வற்ற நிலையில் இருந்தார். கந்தளாய் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்: