தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.2.12

கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம். 3 பேர் கைது.


சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளை யர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இ ருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. சென்னையில் செயின் பறிப்பில் ஈடுப டுகிறவர்களை பிடிக்க இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் தனிப்ப டைகள் அமைக்கப்பட்டன.  அடகு கடைகள், நகைக்கடைகளில் செயின்களை விற்பனை செய்பவர்கள் பட்டியலை தயாரித்து, தனிப்படை போலீசார் கண்கா ணித்து வந்தனர்.

அதில், தி.நகர் போஸ்டல் காலனியைச் சேர்ந்த அருண் பாண்டியன் (எ) அருண், பம்மல் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சென்னையில் பல இடங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறித்தது தெரியவந்தது.பர்மா பஜாரைச் சேர்ந்த நசீர் என்பவர் மூலம் செயின்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால், அவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 51 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்களிடம் விசாரணை நடத்தியதில், கொள்ளையடித்த பணத்தில் துணை நடிகைளுடன் உல்லாசமாக இருந்ததாகவும், அவர்களை புதுவை உள்ளிட்ட மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று ஜாலியாக ஊர் சுற்றி வந்ததாகவும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 3 பேரும், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

0 கருத்துகள்: