தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.5.12

ப்ளஸ்-2 தேர்வு முடிவுகள் – முதல் நான்கு இடத்தில் நாமக்கல் மாணவர்கள் சாதனை!


சென்னை:ப்ளஸ்-2 தேர்வு முடிவு சற்று முன் வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம் 86 சதவிகிதம் என்றும், இதில் மாணவிகள் 89.7 சதவீதம் ,மாணவர்கள் 83.2 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாணவி 1189 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.இவர் இயற்பியல்,வேதியியல், உயிரியல்
மற்றும் கணிதம் ஆகிய 4பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்று இந்த சாதனையை புரிந்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக 1188 ம்திப்பெண்களை பெற்று அதே நாமக்கல் பகுதியை சேர்ந்த கார்த்திகா ,அசோக் குமார் மற்றும் மணிகண்டன் ஆகியோர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
மூன்றாம் இட்த்தை 1187 மதிப்பெண்கள் பெற்று மூன்று பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
முதல் மூன்று இடங்கள் மட்டுமல்லாது,நான்காவது இடத்தையும் நாமக்கல் பகுதிகளை சேர்ந்தவர்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,.
கணித்தில் சாதனை: கணித பாட்த்தில் 2,656 பேர் 200 க்கு 200 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர்.

0 கருத்துகள்: