தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.5.12

சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : சரத் பொன்சேக


சர்வதேசம் முன்வைக்கும் எந்தவொரு போர்க்குற்ற குற் றச்சாட்டு விசாரணைக்கும் இலங்கை அரசு ஒத்துழைப் புவழங்கவேண்டுமென இலங்கையின் முன்னாள் இரா ணுவ தளபதி சரத் பொன்சேக தெரிவித்துள்ளார். நேற்று சிறையிலிருந்து விடுதலையான அவர் பிபிசி செய்தி சே வைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். மே லும்,  சில அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள், அ வர்கள் குற்றம் செய்திருப்பதற்கான எண்ணப்பாட்டினை சர்வதேசத்திடம்
ஏற்படுத்திவிடுகின்றது. யுத்தத்திற்கான வழிநடத்துனர்களாக இருந்தவர்கள், இப்போது தங்களது முகத்தை மறைத்து கொள்ள பார்க்கிறார்கள். இறுதி யுத்தம் தொடர்பில் எவருடைய கேள்விகளுக்கும் தைரியமாக முன்வந்து பதில் அளிக்க நான் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் சிறிலங்காவில் தற்போது நடப்பது  ஊழல் அரசியல் கலாச்சாரம் எனவும் இதை மாற்றுவதற்காக அரசியல் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: