தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.5.12

பயணிகள்-சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 5 பேர் பலி, 30 பேர் படுகாயம்

ஆந்திராவில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோ‌திக் கொண்ட விபத்தில் இரண்டு ‌‌பெட்டிகள் தீ பிடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள், 30 பேர் படுகாயமடைந்துள்ளதா க ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஹூப்ளி என்ற இடத்தி லிருந்து பெங்களூரு செல்லும் ஹம்பி பயணிகள் ரயில், ஆந் திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பெனுகொண்டாவில் இன் று அதிகாலை வந்துகொண்டிருந்தது.அப்போது சரக்கு ரயிலு டன் மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பெட்டிகள் சரிந்து தீ பிடித்தது.இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியா னார்கள்.
30 பேர் படுகாயமடைந்தனர்.தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.


விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்விபத்து சிக்னல் கோளாறு காரணமாக ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 கருத்துகள்: