தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.1.12

முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது : கேரள மீன் வளத்துறை அமைச்சர்

முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக மத் திய நிபுணர் குழு கூறுவதைஏற்றுக்கொள்ள முடியா து என கேரள மாநில மீன் வளத்துறை அமைச்சர் பாபு சென்னையில் கூறியுள்ளார்.கேரள மாநில மீன் வளத் துறை சார்பில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத் தப்படும், இந்திய சர்வதேச மீன்கள்கண்காட்சிஇம்மு றை கொச்சியில்நடைபெறுவதையொட்டி,சென் னை யில் நிரு
பர்களை சந்தித்த பாபு இவ்வாறு தெரிவித்தார்.

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால்,முல்லை பெரியாறு அணை பலமாக இருக்கிறது என அட்வகேட் ஜெனரல் ஊடகங்களிடம்
கூறியிருப்பது தவறான தகவல் ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லை பெரியாறு அணை தொடர்பான இறுதி அறிக்கை, பெப்ரவரி மாதத்தின் மூன்றாம் வாரமளவில் வெளியிடப்படும் என ஆனந்த் தலைமையிலான உச்சநீதிமன்ற
நீதிபதிகள் குழு நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: