தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.1.12

அன்வார் ஓரினப் புணர்ச்சி வழக்கு: இன்று 24 மணிநேரத்திற்குள் தீர்ப்பு!

கோலாலம்பூர், ஜனவரி 9- பல தரப்பட்ட மக்களின் பலத்த எ திர்பார்ப்புகளுக்கிடையே பக்காத்தான் கட்சித் தலைவர் டத் தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக் கில் இன்று (9.1.2012) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இன்னும், 24 மணிநேரத்திற்குள் அன்வாருக்குத் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நி லையில், அவரை விடுதலை செய்யகோரி அவரது ஆதரவாளர் கள்  மாபெரும் பேரணி ஒன்றை
ஏற்பாடு செய்துள்ளனர்.  இதற்கு முன் பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில், தமக்கெதிரான ஓரினப் புணர்ச்சி வழக்கில் எந்த முடிவாக இருந்தாலும், தொடர்ந்து போராடுவேன் என அன்வார் இப்ராஹிம் சூளுரைத்திருந்தார்.முன்னாள் துணைப்பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஓரினப் புணர்ச்சி மற்றும் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியது, ஆகிய இரு குற்றங்களுக்காக ஏற்கெனவே கடந்த 1998-ஆம் ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டார். 6 ஆண்டுகள் சிறைதண்டனைக்குப் பிறகு அவர் கடந்த 2004-ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னாள் துணைப்பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஓரினப் புணர்ச்சி மற்றும் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியது, ஆகிய இரு குற்றங்களுக்காக ஏற்கெனவே கடந்த 1998-ஆம் ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டார். 6 ஆண்டுகள் சிறைதண்டனைக்குப் பிறகு அவர் கடந்த 2004-ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுதலையாவாரா? அல்லது அவருக்குத் தண்டனை வழங்கப்படுமா? என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

0 கருத்துகள்: