தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.1.12

கென்ய விமானக்குண்டு வீச்சு தாக்குதல் : 60 சோமாலிய கிளர்ச்சியாளர்கள் பலி

சோமாலியாவின் அல் ஷபாப் கிளர்ச்சிக்குழுவின் 60 பேரை தாம் கொன்றுள்ளதாக கென்யஇராணுவம் தெரி வித்துள்ளது. சுமார் 20 க்கு மேற்பட்ட இஸ்லாமிய போ ராளி கிளர்ச்சிக்குழுக்களை தாம் கடந்த சில வாரங்களி ல் தோற்கடித்துள்ளதாகவும் இதில் 'அல் ஷபாப்' மீதான தாக்குதல் குறிப்பிடத்தக்கவை எனவும், கென்யஇராணு வ பேச்சாளர் கொல் சிரஸ்
ஒகுனா தெரிவித்துள்ளார்.எ தியோப்பிய இராணுவத்தின் சோமாலியா மீதான ஆக்கிரமிப்பு மற்றும் சோமா லியாவில் பல கிளர்ச்சிக்குழுக்கள் தமக்குள் மோதி வருதல் போன்ற ஆபத்துக்களால் கென்யாவில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்படும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகள் கென்யாவுக்கு எச்சரித்திருந்தன.

இந்நிலையில் சோமாலியாவின் கார்பஹரேய் எனும் இடத்தில் கென்ய விமானங்கள் நடத்திய இக்குண்டு வீச்சு தாக்குதலில் 60 க்கு மேற்பட்ட அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கென்யாவில் கடந்த வருடம் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அல் ஷாபாப் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: