தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.11.11

இங்கிலாந்தில் ஆட்குறைப்பால் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்!

லண்டன், நவ. 17-  இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான அரசு, அதிரடி ஆட்குறைப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியனை சேராத நாடுகளிலிருந்து பணிதொடர்பாக, இங்கிலாந்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்தின் இந்த
அறிவிப்பின் மூலம் சுமார் 40 ஆயிரம் பேர் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்தியர்கள் உள்ளிட்டோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இங்கிலாந்து அரசின் குடியேற்றத்துறை ஆலோசனை குழு, பணியாளர் குறைப்பை எந்தெந்த துறைகளில் எல்லாம் மேற்கொள்ளலாம் என்பதன் விபரத்தை, பிரதமர் டேவிட் கேமரூன் பார்வைக்கு வைத்தது. இந்த பரிந்துரைக்கு, பிரதமர் கேமரூனும் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, இந்த பணியாளர் குறைப்பு பட்டியலில், மருந்தாளுனர்கள் (பார்மசிஸ்ட்கள்), கால்நடை மருத்துவர்கள், பேச்சு மற்றும் லாங்குவேஜ் தெரபிஸ்ட்கள், மேல்நிலைக் கல்வி உயிரியல் ஆசிரியர்கள், ஆர்தோப்டிஸ்ட்கள், இசை வல்லுனர்கள் உள்ளிட்ட துறைகள் இடம்பெற்றுள்ளன.
இன்சூரன்ஸ் மற்றும் நிதி சம்பந்தமான நுணுக்கம் பெற்றவர்கள் மற்றும் பைப் வெல்டர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் என பல பிரிவுகளில் சிறந்து விளங்கும் நம்நாட்டவர்களுக்கு இங்கிலாந்தின் இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்துள்ளது.

0 கருத்துகள்: