தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.10.11

குஜராத் முஸ்லிம்கள் படுகொலை: மோடிக்கு எதிராக சாட்சி சொன்ன ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்து உள்ளே தள்ளிய மோடி!,


குஜராத் முஸ்லிம்களை படுகொலை செய்த மோடிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை, உள்ளூர் நீதிமன்றே விசாரித்துக் கொள்ளலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அறிவித்தை தொடர்ந்து நரபலி மோடி ஹிட்லரை மிஞ்சம் தனது அராஜக போக்கை ஆரம்பிக்க துவங்கி விட்டான்.
குஜராத் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சமீபத்தில் மூத்த
ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் தத் மோடிக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
”மோடி தான் கலவரத்தை கண்டு கொள்ளாமல் இருக்க சொன்னார்” என பகிரங்கமாக சாட்சி சொன்ன ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் தத் அவர்களை நேற்று மோடி அரசு கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது.
”ஏய் நான் யாரு தெரியுமா எனக்கு எதிரா சாட்சி சொன்ன, உன்ன ஃபொர்ஜரி கேஸ்ல உள்ள போட்ருவேன்” என்ற வில்லன்களின் டயலாக்கை வில்லனுக்கேல்லாம் வில்லனான மோடி தற்போது நடைமுறை படுத்தியுள்ளான்.
ஆம் , சஜ்ஜீவ் தத் மீது ஃபொர்ஜரி கேஸை புக் பன்னி உள்ளே தள்ளியுள்ளார் இந்த மோடி!. இவர் மீது 341, 342, 189, 193 , 195 இத்தனை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்த அளவிற்கு எனில் கைது செய்த சஞ்சீவ் விற்கு தனது வளக்கரிஞரை சந்திக்க கூட அனுமதி இல்லை.
இது குறித்து அவரது மனைவி சுவேதா கமிஷனுருக்கு அளித்ததுள்ள புகாரில் ”எனது கவனர் கொலை செய்யப்படும் அபாயத்தில் உள்ளார். ஏனெனில் போலி என்கவுண்டர்களுக்கு பேர் போன சிட்டி கிரைம் போலிசாரால் எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞரை சந்திப்பதற்கு கூட அவருக்கு அனுமதி தரப்படவில்லை. எனவே அவரது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்” எனக் தெரிவித்துள்ளார்.
மோடி இது போன்று  தனது ஹிட்லர் தனத்தை அதிகரிக்க காரணம், ”மோடி ஊரிலேயே மோடி தனது வழக்கை விசாரித்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது தான்.
பிஜேபி இந்த கைதை வரவேற்றுள்ளது. இது நியாயமான நடவடிக்கையாம்.
அதே நேரத்தில் காங்கிரஸ் இது பற்றி கூறுகையில், சஞசீவ் தத் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு மேலும் மேலும் சோதனைகள் வருகின்றது குஜராத்தில் சட்ட ஒழுங்கே இல்ல எனத் தெரிவித்துள்ளது.
மோடியின் பிரதமர் கனவிற்கு நெருடலாக இருப்பது குஜாரத் முஸ்லிம்கள் படுகொலை, இதில் மோடி தான் வெற்றி  பெற, இன்னும் எத்தன நபர்களை பலியாக்க போகின்றானோ தெரிவில்லை!…
-அபு அஜீபா
எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னது இதோ 

குஜராத் படுகொலை : முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டுவதற்காக வெண்டுமென்றே அனுமதித்தார் மோடி! – மோடியின் ரகசிய கூட்டத்தில் கலந்து கொண்ட IAS போலீஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம்!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட மதக் கலவரத்தை குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திரமோடி வேண்டுமென்றே நடக்க அனுமதித்திருந்தார் என்று மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கலவரத்தின்போது உதவி கோரி மக்கள் விடுக்கும் அழைப்புகளை புறந்தள்ளுங்கள் என்று போலிஸ் அதிகாரிகளுக்கு நரேந்திரமோடி உத்தரவிட்டிருந்த கூட்டத்தில் தானும் கலந்துகொண்டிருந்ததாக சஞ்சீவ் பட் என்ற அந்த உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் “கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பு காணப்படுகிறது. இத்தகைய சம்பவம் இனி நிகழாதவாறு இஸ்லாமியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.” என்று மோடி கூறியதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் வன்முறையாளர்களை தடுக்கக்கூடாது என மோடி உத்தரவிட்டார். அத்துடன் மக்கள் உணர்வுகளுக்கு அணை போட்டு தடுக்கக் கூடாது என்றார். எனவே நாங்கள் வன்முறையை கட்டுப்படுத்தவில்லை என ஐ ஏ எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது, அவர் மாநில ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தின் முதல்வராக உள்ளார்.
 

0 கருத்துகள்: